உலகில் ஆச்சரியமிக்க வரலாற்றுப் பக்கங்களைக் கொண்ட நாடுகளுல் இந்தியாவும் ஒன்று. இங்கு நிலவிய தொன்மைப் பண்பாடுகள் ஆபிரிக்காவையும் மிஞ்சி நிற்கின்றன. அதற்கான ஆதாரங்கள் அழிவடைந்த நிலையில் இந்தியா முழுதும் பரவலாகக் கிடைக்கின்றன. அதில் பீ.பீ.சி தொகுத்திருக்கும் இந்தியாவின் கதை சுவாரஸ்யமிக்கது. பல புதிய தகவல்களை இந்தியாவின் வரலாறு குறித்து தருகின்றது
Wednesday, November 21, 2012
Saturday, October 20, 2012
கிளிநொச்சியில் தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
இலங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத் திட்டத்தில் உள்ள காணி 1990 ஆம் ஆண்டளவில் பயிர்ச் செய்கைக்காகத் திருத்தப்பட்டபோது, எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும், தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன.
Tuesday, June 19, 2012
12 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட மனிதஎலும்புக் கூடுகள் இலங்கையில் கண்டெடுப்பு
இலங்கையில் 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் ஆதி மனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று பாஹியங்கல குகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல்லியல்துறை கூறுகிறது.இலங்கையின் கலுத்துறை மாவட்டத்திலே பாஹியங்கல என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுவரும் குகையில் இருந்து இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியில்துறை தெரிவிக்கிறது.
கொழும்பு நூதனசாலையினுள் என்ன இருக்கின்றது?
கொழும்பு நூதனசாலையானது அன்னியர் ஆட்சிக்கால கட்டத்தில் அதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி ஸ்ரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த நூதனசாலை 1942 ஆம் ஆண்டு பி.சி.பி. திறனியகலை என்பவரின் முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் தேசிய அந்தஸ்துப்பெற்ற ஓர் உயரிய கலைக்கூடகமாக விளங்க வித்திடப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)