Wednesday, November 21, 2012

இந்தியாவின் கதை- வீடியோ பாகம்-01

உலகில் ஆச்சரியமிக்க வரலாற்றுப் பக்கங்களைக் கொண்ட நாடுகளுல் இந்தியாவும் ஒன்று. இங்கு நிலவிய தொன்மைப் பண்பாடுகள் ஆபிரிக்காவையும் மிஞ்சி நிற்கின்றன. அதற்கான ஆதாரங்கள் அழிவடைந்த நிலையில் இந்தியா முழுதும் பரவலாகக் கிடைக்கின்றன. அதில் பீ.பீ.சி தொகுத்திருக்கும் இந்தியாவின் கதை சுவாரஸ்யமிக்கது. பல புதிய தகவல்களை இந்தியாவின் வரலாறு குறித்து தருகின்றது

Saturday, October 20, 2012

கிளிநொச்சியில் தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு


லங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத் திட்டத்தில் உள்ள காணி 1990 ஆம் ஆண்டளவில் பயிர்ச் செய்கைக்காகத் திருத்தப்பட்டபோது, எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும், தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன. 

யாழ்ப்பாணத்தில் படைவீரர்களுக்கான கோயில்


இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்


தென்மராட்சியின் வரலாற்றைத் தனித்துப் பார்ப்பதற்கு அப்பிரதேச மக்களிடையே காணப்படும் இறுக்கமான சமயப்பற்று ஒரு முக்கிய காரணமாகும். யாழ்ப்பாண வரலாற்றில் இஸ்லாம், கிறிஸ்தவம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய கலாசாரம் எனப் பல்லினப் பண்பாடு முதலில் தோன்றி வளர்ந்த இடங்களில் ஒன்றாகத் தென்மராட்சியும் கூறப்படுகிறது.

மறைந்து கொண்டிருக்கும் கந்தரோடைத் தொல்லியல்

தமிழ் மக்கள் மத்தியில் தமது பண் பாட்டுத் தொடர்சியைக் குறித்த மையத்தில் நிலை நிறுத்துவதற்கு வேண்டப்பட்ட மன உணர்வு உருவாக்கப்படுவதற்கும் வாய்ப்பில்லாதொழிந்தது. இவ்வாறான ஒரு பின்னணி யே இன்று ‘கிழக்காக மாயக்கை நீரேந்து பரப்பும் மக்கள் வாழ்வின் புராதன இரு மையங்களாக இருந்து வந்நதிருக்கின்றன. 

Tuesday, June 19, 2012

12 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட மனிதஎலும்புக் கூடுகள் இலங்கையில் கண்டெடுப்பு


இலங்கையில் 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் ஆதி மனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று பாஹியங்கல குகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல்லியல்துறை கூறுகிறது.இலங்கையின் கலுத்துறை மாவட்டத்திலே பாஹியங்கல என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுவரும் குகையில் இருந்து இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியில்துறை தெரிவிக்கிறது.

கொழும்பு நூதனசாலையினுள் என்ன இருக்கின்றது?


கொழும்பு நூதனசாலையானது அன்னியர் ஆட்சிக்கால கட்டத்தில் அதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி ஸ்ரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.  இந்த நூதனசாலை 1942 ஆம் ஆண்டு பி.சி.பி. திறனியகலை என்பவரின் முகாமைத்துவ நிர்வாகத்தின்  கீழ் தேசிய அந்தஸ்துப்பெற்ற ஓர் உயரிய கலைக்கூடகமாக விளங்க வித்திடப்பட்டது.