து.ஜெயராஜா
![]() |
இலங்கையில் சாத்தியமான தருணமொன்று |
உலகம் கிராமமாகிய சூழலில் பண்பாடுகளும், பண்பாடு பற்றிய சித்தாந்தங்களும் மாற்றுவடிவம் பெற்று வருகின்றன. அனைத்தையும் வணிகம் நோக்கிய பாதையில் இழுத்துப் போகும் புதிய உலக ஒழுங்கானது, தனித்துவமானதாக இருந்த பண்பாட்டையும் தன்வழிக்கு கெண்டுவந்து விட்டது. ஒவ்வொரு முடுக்கிலும் வாழுகின்ற பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களை பேதமற்று உள்ளீர்த்துக் கொள்கின்றது. இன்றைய உலகமயச் சூழல் எதற்கும் எல்லைகள் கிடையாது. அனைத்தும் முதலாளித்துவ சிந்தனை வட்டத்துக்குட்பட்டே ஜீவிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழுகின்றன. தம் எல்லைகளைத் தகர்த்; தெறிகின்றன. அடிமைப்படுத்தலின் அல்லது நவகாலனித்துவப்படுத்தலின் வடிவமாய் பரப்பப்படும் நுகர்வுக் கலாச்சாரம் வணிக நோக்கிலான கலாசார கூறுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன. அது மேலும் மேலும் நாடுகளெங்கும் விரிவடைந்து முதலாளித்துவ கால்கள் வலுப்பெறுவதற்கு சமச்சிந்தனையும், சமப் பண்பாடும் உடைய மக்கள் தேவைப்படுகின்றனர். இது முக்கியமாய் உணரப்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில், முன்வைக்கப்பட்டதே “பல்லினப்பண்பாடு” ஜஆரடவi ஊரடவரசநஸ எனும் கருத்துருவம் ஆகும். 19ஆம் நூற்றாண்டில் இப்பண்பாடானது மேற்கத்தேய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டன. சில நாடகள் வணிக ரீதியான வெற்றியை இதில் கண்டன.
இவ்வகையில் ஆரம்பமாகிய பல்லினப் பண்பாட்டிற்கு காலத்திற்கு காலம் வரைவிலக்கணப்படுத்தல்கள் இடம் பெற்று வந்துள்ளன. ஆரம்பத்தில் ஒரு நாட்டில் அல்லது வட்டாரத்தில் பல இன, மொழி, மத வேறுபாடு கொண்ட மக்கள் கூட்டாக வாழ்தலை பல்லினப் பண்பாடு என வரைவுபடுத்தினர். ஆனால் இன்றைய நிலையில் இக்கருத்து மேலும் செழுமை பெற்று, குறிப்பிட்ட பிராந்தியத்தில் பன்மைப் பண்பாடுகளைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்வதோடு. அவர்களிடையே அரசியல், சமூக, சமய, பொருளாதார ரீதியில் பரஸ்பர புரிந்துணர்வு பேணப்படுதலே சரியான பல்லினப்பண்பாடாக அடையாளம் காணப்படுகின்றது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனங்களின் வாழ்வு நிலமைகளை நிராகரிப்பதையும், அவர்தம் பண்பாட்டு பேணலுக்கு அனமதி மறுப்பதையும் சரியான பல்லின பண்பாடாக ஏற்கமுடியாது எனவும் கூறப்படுகின்றது.
![]() |
கொடிகளில் பறக்கும் பன்மைத்துவம். |
இவ்வாறு அறிவியல் ரீதியான கோட்பாட்டாக்கத்தைப் பெற்றுவிட்ட பல்லினப் பண்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் இன்று நெற்று உருவானதல்ல. 18 ஆம் நூற்றாண்டில் அதற்கு ஒரு அறிவார்ந்த தளம் கிடைத்ததே தவிர அந்நூறாண்டில் உருவாக்கவில்லை. மனித பரிணாமத்தில் நாகரீக நிலையை அடையும் போதே பல்லின பண்பாடு முகிழ்ப்புப்; பெற்று விட்டதாக எண்ணப்படுகின்றது. பண்டைய காலத்தில் ஆறு, மலை, குகை, மேட்டுப் பகுதிகள் போன்ற இயற்கை எல்லைகளுக்குள் மனிதக் கூட்டம் தம்மை வரையறுத்துக் கௌ;ள வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இனக்குழுமங்களுக்கிடையே தொடர்புகள் அரிதாகவே காணப்பட்டது. இனக்குழும வாழ்வு எழுத்தின் அறிமுகம், நகர உருவாக்கம். அரச உருவாக்கம், விவசாய பொருளாதார அறிமுகம் போன்றவற்றின் வருகையோடு நாகரீக நிலையை அடைந்தது. இந்நாகரீகங்கள் ஒவ்வொன்றும் கொண்டிருந்த தொடர்புகள் பல்வேறு பண்பாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு வழிசமைத்தது. உதாரணமாக சிந்துவெளி, தமாசப்பத்தேமிய, சுமேதிய, எகிப்திய, கிரேக்க நாகரீகங்கள் தமக்கிடையே பரிமாறிக் கொண்ட பண்பாட்டம்சங்களைக் குறிப்பிடலாம். நாகரீகங்களின் அஸ்தமிப்போடு உருவான வரலாற்றுக் காலமும், பேரரச உருவாக்கங்களும் அடிமைப்படுத்தல்களைத் தீவிரப்படுத்தியது. நாடு விட்டு நாடாக பெரும் படைகளோடு பரந்த படையெடுப்புக்கள், பண்பாட்டு நிர்மூலமாக்கல்களுக்கு வழிசமைத்தது. ஒன்றையழித்து அதன் எச்சங்களைக் கொண்டு இன்னொன்று கட்டியெழுப்பப்பட்டது. புதிதாய் அறிமுகமாகும் ஒவ்வொரு பண்பாட்டிலும் பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் கலந்திருந்தன. பல்லினப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் 16ஆம் நூற்றாண்டு வரை இந் நிலமையே நீடித்தது. இந்நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான மறுமலர்ச்சி, கைத் தொழில் புரட்சி, பிரான்சிய புரட்சி, நாடுகாண் பயணங்கள், போக்குவரத்து விருத்தி போன்றன அனைத்து இனங்களையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. விருத்தியடைந்த மேற்கத்தேயர்கள் பல விருத்தி குறைந்த தேசங்களையும், இனங்களையும் கண்டுபிடித்து, படையியல் ரீதியாக கைப்பற்றிக் கொண்டனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் இப்பின்னணியில் தமது பண்பாடுகளை உலகம் முழுவதும் பரப்பினர். அதுவும் ஒரு காலனித்துவ ரீதியிலானதாகவே அமைந்தது. இக்காலகட்டத்திற்கு முடிவுகட்ட உருவான பிரான்சிய புரட்சியானது உலகம் முழுவதும் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற சிந்தனைகளை ஏற்படுத்தியது. அவர்கள் முன்னெடுத்த விடுதலைப்போராட்டம் சுதேச இன அடையாளப்படுத்தல்களுக்கான தேடலைத் தொடக்கிவைத்தது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் பல இனங்களை அத்தேடல் கண்டடைந்தது. இதுவே தேசியவாதம் எனப்படுகின்றது. தேசியவாதத்தின் முதிர்ச்சியில் உருவான உலகமயமாதல் முதலாளித்துவத்தை விஸ்தீரணப்படுத்தியது. கம்ய+னிசத்தின் சரணடைதலோடு பெருவிருட்சமாகிய முதலாளித்துவம் உலகை கிராமமாக்கி நுகர்வு கலாச்சாரம் கொண்ட இனங்களை உருவாக்க கருமமாற்றியது. அதற்காக உருவாக்கப்பட்ட பண்பாட்டு போட்பாட்டாக்கமே பல்லினப்பண்பாடு. இதனை நடைமுறைப்படுத்துவதில் மேற்கற்தேய நாடுகள் முன்நின்றாலும் பல குறை நிறைகளை கொண்டு காணப்படுகின்றது.
உலக மக்கள் அனைவரும் தம் சக மனிதரை, அவரது பண்பாட்டம்சங்களை ஏற்று மதித்து நடக்க வைத்தமை பல்லினப்பண்பாட்டின் ஒரு நிறைவான அம்சமாகும். கடந்த நூற்றாண்டுகளில் மிக மோசமான அடக்கு முறைக்குள்ளும், அடிமைப் படுத்தல்களுக்குள்ளும் வாழந்த கறுப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்களால் சமநிலையில் வைத்து நோக்கப்படுகின்றனர். அவர்தம் மதத்தையும், கலைப்பாரம் பரியங்களையும் அவர்கள் வாழும் இடங்களிளெல்லாம் பேணிக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியுள்ளது. அரசியல் ரீதியாக சமத்துவ நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. உதாரணமாக கறுப்பினத்தவர்களை மிக மோசமாக அடக்கிய அமெரிக்கர்களுக்கே கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபமா ஜனதிபதியாக வந்தமையைக் குறிப்பிடலாம். இவ்வாறான நிலையே கீழைத்தேய மக்களைப் பொருத்தும் மேற்கு நாட்டில் நிலவுகின்றது. இது ஒரு நிறைவான அம்சமாகும்.
முன்னைய காலங்களில் குறிப்பிட்ட இனத்தவர் தமது பண்பாடு நிலவும்இடங்களில் மட்டுமே வாழமுடியும். அதையே தமது வாழ்வுப் பிரதேசமாக கட்டுப்படுத்திக் கொள்வர். ஆனால் பல்லினப்பண்பாட்டின் வரவினால் பணமும், வசதியும் உள்ள ஒருவர் உலகில் எங்கு சென்று வாழவும், தமது பண்பாட்டை பேணுவதற்குமான அங்கீகாரத்தை இது வழங்கியுள்ளது.
கடந்த நூற்றாண்டு வரையில் இனங்களுக்கிடையில் சமூக நல்லிணக்கமும், மனிதநேய உணர்வும், மனிதவுரிமைகளை பேணுவதில் சிரமமும் நிலவியே வந்தது. இத்; தொடர்ச்சியான குறைபாட்டினாலேயே முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் ஏற்பட்டன. இனங்களுக்கிடையில் பன்மைத்துவத்தையும் இணங்கிவாழ்தலையும் போதிக்கும் பல்லினப்பண்பாடு மேற்கண்ட சிந்தனைகள் உலக இயங்கியலுக்கு அனுகூலமான வழியில் அமைய உதவுகின்றது.
நாகரீக நிலையை மனித சமுதாயம் அடைவதற்கு முன்பு தாய்வழிச் சமூகமே மேலாதிக்கம் பெற்றிருந்தது எனப்படுகின்றது. பேரரச உருவாக்கங்களோடு வீரியம் பெற்ற ஆணாதிக்கம் பெண் தலைமைத்துவத்தையும், உரிமையையும் பறித்துக்; கொண்டது. பல்லினங்களுக்கிடையில் சம அந்தஸ்தை வலியுறுத்தி, அதனையே நடைமுறைப்படத்தும் பல்லினப்பண்பாடு, பெண்கல்வி வரை வழிசமைத்துள்ளது.
உலகில் வரலாற்றுக் காலத்திலிருந்து நிலவி வரும் பெரும்பான்மை, சிறுபான்மை இனச்சிக்கலை ஓரளவிற்காவது தணிப்பதில் பல்லினப்பண்பாடு வெற்றியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். மிகவும் இறுக்கமான சமூக, சமய. சாதிப் பண்பாடுகளை பேணும் சமூகங்களிடையே உடைவு ஏற்படகின்றமை அதற்கு ஆதாரமாய் அமைகின்றது. ஜனநாயக, சம~;டி அடிப்படையில்; தமது அரசியல், மத உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், பெற்றுக் கொள்வதற்குமான சுதந்திரத்தை இது வழங்கியுள்ளது. உதாரணமாக மிக இறுக்கமான சமூக நடைமுறைகளைப் பேணும் தென்னாசிய நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் குறிப்பிடலாம். பெரும்பான்மை மதமாக இருக்கும் இந்துமதத்தை கொண்டிருக்கும் இந்தியாவிற்கு சிறுபான்மை மதமான சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் அதிகாரம் மிக்க தலைவராக தெரிவு செயய்ப்பட்டமையைக் குறிப்பிடலாம். இவ்வாறு பல நிறைவான அம்சங்களை கொண்டிருக்கின்ற போதிலும் சில குறைவாக பக்கங்களையும் இது கொண்டுள்ளது.
பல்லினப்பண்பாடு அறிவார்ந்த நிலையில் ஏற்க கூடியதாக இருந்தாலும், ஆழ் மனதில் புரையோடிப்போன ஆண்டான் – அடிமை சிந்தனை இதனை அமுல்படுத்துவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் நிலவும் நிலமைகள் பல்லிணப்பண்பாடில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவுக்கான நிரந்தர குடியுரிமையை பெறும் அனைவருக்கும் கிறீன்கார்ட் வழங்கப்படும். அதில் தேச. இன, மத. மொழி வேறுபாடு இருப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான கீறீன் அட்டைகள் தான். ஏனெனில் அதனூடாக பல்லினத்தன்மையை மதிக்கும் நாடு என்பதை உலகத்திற்கு அமெரிக்கா காட்டிக் கொள்கின்றது. ஆனால் அண்மையில் ஆபிரிக்க கறுப்பர் ஒருவரினதும். அமெரிக்க ப+ர்வீக வெள்ளையர் ஒருவரினதும் கிறீன்; அட்டைகளை இலத்திரனியல் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தியபோது இரண்டுக்குமிடையில் பதிவு அடிப்படையில் வேறுபாடு கடைப்பிடிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு அண்மைய பேரனர்தங்களின் போது கூட அமெரிக்க வெள்ளையர்களின்; அபிவிருத்திப் பணிகளுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் மாகாண அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில்; பாராபட்சம் காட்டப்பட்டிருந்தது.
மேலும் பல்லினப்பண்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவந்த பிரான்ஸ் அண்மைக்காலமாக அதிலிருந்து விலகிச் செல்வதை அவதானிக்க கூடியதாகயுள்ளது. கடந்த ஆண்டில் அந்நாடு இஸ்லாமிய பெண்களது மதப்பண்பாடான பர்தா அணிவதை தடை செய்திருந்தது. பர்தா அணிந்து வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியமையடுத்தே இத் தடைச்சட்டம் இமுலுக்கு வந்தது. கடந்த வாரத்திலும் பல்லினப்பண்பாட்டக்கு எதிராக மேலும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. பிரான்சின் நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கு அந்நாட்டின், மொழி, மத,கலாசார அம்சங்களை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் பல்லினப்பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அடுத்து கடந்த வருடத்தில் பிரித்தானியாவில் இடம் பெற்ற மிகப் பெரும் கலவரம் பல்லினத்துவத்தை பேணுவதில் உள்ள சிரமத்தையே வெளிக்காட்டியது. அகதி அந்தஸ்துக்கோரி பிரித்தானியவ இக்கலவரம் வெடித்தது. இப்பாராபட்சம் பாரம்பரியமாக அங்கு இருந்து வருகின்றது. உதாணரமாக பிரித்தானியாவில் குடியேறும் பிறநாட்டு புத்திஜீவிகளுக்கு நகரை அண்டிய பகுதிகளில் வேலை வழங்குவதில்லை. மாறாக விருத்தி குறைந்த பகுதிகளிலேயே வழங்கப்படும். இது அந்நாடு பல்லினப்பண்பாட்டை சரிவர புரிந்து கொள்ளாததை காட்டுகின்றது.
![]() |
கைகள் கொடுத்துக் கொள்ளலாம். |
மேலும் பல நூற்றுக்கணக்கான இனங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் இன்னமும் பழங்குடியினர் அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இதற்கு மறுவினையாகவே தெலுங்கான, மாவோயில்யல்ட், நக்சலைற் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கு அடுத்திருக்கும் இலங்கையிலும் இதே நிலைதான். போர் ஓய்விற்குப் பின்னர் நல்லிணக்கம், பல்லினபண்பாடு பேத பொருளாக இருந்தாலும் அதை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இன்னமும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவரே ஆளும் உரித்துடையவராகும் நிலையுள்ளது.
அவுஸ்திரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளில் பல்லினபண்பாட்டை அவமதிக்கும் போக்கே காணப்படுகின்றது. டென்மார்க்கில் இஸ்லாமியர்களின் புனிதநூலாகிய குர் ஆன் எரிக்கப்பட்டதையும், அவுஸ்திரேலியாவில் இந்துக்கடவுளர்களை அவமானப்படுத்தும் வகையில் அத் தெய்வங்களின் உருவம் பொறித்த உள் ஆடைகள் தயாரிக்கப்படுவதும் பல்லினத்தன்மை புறக்கணிக்கப்படுவதை எடுத்துக் காட்டுகின்றது.
இன்று உலக நாடுகள் பலவும் பல்லினபண்பாட்டை நடைமுறைப்படத்துவதில்; ஆர்வம் காட்டிவருகின்றன. அவை ஆதாயம் தேடும் வணிக நோக்கில் அமைந்து விடுவதால் பல்வேறு குறைநிறைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இலங்கையிலும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியலான நலன்களுக்காக மட்டும் என்ற நோக்கில் பல்லினப்பண்பாடு அணுகப்படுவதனால் அஆ சாத்தியமாகும் தருணங்கள் அருகிவருகின்றது.
No comments:
Post a Comment