து.ஜெயராஜா
உலகமயமாக்கலுக்கு முன்வைக்கப்பட்டுள்ள விளக்கங்கள்.
• தொலைவிலிருக்கும் இடங்களை இணைக்கின்ற பல மைல்களுக்கு அப்பால் நிகழும் நிகழ்வுகள் உருமைக்கப்படுகின்ற உலகளவிலான சமூக உறவுகளின் தீவிரப்படுத்தலை உலகமயமாக்கல் எனலாம்.
•நவீனத்தன்மையின் ஆரம்ப காலங்களிலிருந்ததை விட அதிக நடைமுறை சாத்தியமாகவும், உடனடியாக நிகழ்வதாகவும் பெருமளவில் தெரியக்கூடியதான உலக தொலைத் தொடர்பின் பெருக்கத்தையும், உலக சந்தை எல்லையின் பெருக்கத்தையும் உலகமயமாக்கல் எனும் சொல் பிரதிபலிக்கின்றது.
Fredric Jonson, Deluge University
• உலகினை அழுத்திச் சுருக்குதல், உலகம் என்பதைப் பற்றிய பிரக்ஞையின் தீவிரப்படுத்தல் ஆகிய இரண்டையும் முழுமையாக குறிப்பிடும் ஒரு கருத்தாக்கமாக உலகமயமாக்கம் அமைந்துள்ளது.
Roland Robertson, Bits Park University
• சமூக உறவுகளில் காலம், இடம் ஆகிய கூறுகளை உலகமயமாக்கல் அழுத்தி செறிவ+ட்டுகின்றது.
James
Mittermen, American, UNC
மனித சிந்தனைகளிலும், அதன் தூண்டல், துலங்களிலும் காலத்துக்கு காலம் எழுச்சி பெறும் உலக ஒழுங்கு மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வந்திருக்கின்றது. இந்தப் பொதுவான அபிப்பிராயத்திற்கு அமைவானதாகவே தற்கால உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் உலகமயமாக்கலும் இருந்து வருகின்றது. நமது காலத்தில் அனைவரும் முணுமுணுக்கும் சொல்லாக மாறி விட்டிருப்பது “உலகமயமாக்கல்” கடந்த சில பத்தாண்டுகளில் விரைவு பட்டிருப்பதாகவும், ஆளப்பட்டதாகவும் கூறப்படுகின்ற பொருளாதார, அரசியல், கலாசார, கருத்தியல். சுற்றுச்சூழல் செயன்முறைகளை விளக்குகின்றதாக இச்சொல் அமைகின்றது. உலகளாவிய, பிரதேச, வட்டாரச் சமூக வாழ்ககையின் கூறுகளை உள்ளடக்கிய பன்முகப்பட்டதொரு செயன்முறையாக இதனை விவரிக்கின்றனர். வணிக நோக்கில் தொடர்ச்சியயாக மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயன்முறை பொருளாதார, அரசியல் ரீதியில் எல்லைகளை தகர்ப்பதோடு, ஒவ்வொரு நாட்டினதும் சுதேச பண்பாடுகளை மோசமாக பாதித்து வருகின்றது. அதுவும் வளர்முக நாடுகளின் பண்பாடுகளை முற்றுமுழுதாக சிதைத்து வளர்ந்த நாட்டின் பின்பற்றல்களுக்குள் அடிபணிய வைக்கின்றது. அது இந்நாடுகளின் பண்பாட்டைப் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகின்றது.
உலகமயமாக்கலானது வளர்முக நாடுகளின் அரசியல் பண்பாட்டில் மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. உலகமயமாக்கலை முன்னெடுக்கும் அமெரிக்காவின் நலனைப் பொறுத்தே இந்நாடுகளின் அரசியல் நிலமைகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஜனநாயக நாடுகளாக வளர்முக நாடுகள் தம்மை அடையாளப்படுத்துகின்ற போதிலும், சுதேச மக்களின் சுயாதீன அரசியலில் தெரிவுகளுக்கும், சுதந்திரமாய் வாழ்வதற்கும் இடைய+ராகவே உலகமயமாக்கல் அமைந்து விடுகின்றது. எப்போதும் அமெரிக்கா போதிக்கின்ற அரசியல் சிந்தனைகளையும், திறந்த பொருளாதார முறைமைகளையும் செயற்படுத்தவல்ல தலைவர்களே வளர்முக நாடுகளின் மக்களது அரசியல் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக மாறுகின்றனர். சுதேச மக்கள் விரும்பும் அரசியலும், அதனை முன்னிலைப்படுத்திய அரசியல் செய்யும் தலைவர்களும் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர். அண்மைக் காலங்களில் ஈழத்தமிழர் அரசியல் நிராகரிப்புக்கும், லிபிய ஆட்சித் தலைவரின் உயிர் பறிப்பும் இந்தப் பின்னணியிலேயே நிகழ்ந்தேறியவை. எனவே உலகமயமாக்கலானது வளர்முக நாடுகளது அரசியலை பாதிக்கின்றது.
அடுத்து உலகமயமாக்கலின் முக்கிய அம்சமான பொருளாதார முன்னெடுப்புக்கள், வளர்முக நாடுகளின் பொருளியல் ஈட்டங்களை பின் தள்ளுகின்றது. உலகமயமாக்கல் நடைமுறைப்படுத்தும் திறந்த பொருளாதாரக் கொள்கை வளர்முக நாடுகளை நுகர்வுச் சந்தையாக மாற்றுகின்றது. எல்லைகளற்ற வணிகமயம், மூலவளங்களை இந்நாடுகளில்; மலிவாக பெறவும், முடிவுப் பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்வதற்குமான சூழலை ஏற்படுத்துகின்றது. இதனால் வளர்முக நாடுகளின் மக்களது பொருளாதார ஈட்டங்கள் சுரண்டப்படுவதோடு வறுமை, வேலையில்லா பிரச்சினை, வேலையின்மை போன்றனவும் ஏற்படுத்துகின்றது. இது சுதேச மக்களது பொருளாதார வளர்ச்சியை நிலைகுலையச் செய்கின்றது.
இவ்வாறாக உலகமயமாக்கலினால் வளர்முக நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புள்ளாகின்றது. உலகமயமாக்கல் அரசியல், பொருளாதர அம்சங்களை மேற்கண்டவகையில் பாதித்தாலும் மிக மோசமான பாதிப்புக்குள்ளாவது வளர்முக நாடுகளின் சமூக பண்பாட்டு அம்சங்களே அந்த வகையில் நோக்குகின்ற போது வளர்முக நாடுகளின் மக்கள் பின்பற்றுகின்ற மதம் பல்வேறு சீர்குலைவுகளை இன்று சந்தித்து வருகின்றது. மனிதனது பண்பாட்டு விருத்திக்கு மதங்கள் மிக காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன. அதனாலேயே ஒவ்வொரு இனமும் தன் பண்பாட்டுக்கு இயைவான மத நடவடிக்;கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன. சடங்கு நிலையிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட நிலைவரைக்கும் வளர்முக நாடுகளில் மதம் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால் காலனித்துவ காலத்துடன் உடைவுக்குள்ளான குறிப்பிட்ட நாடுகளின்; மதப்பாரம்பரியங்கள் இங்கு கிறிஸ்தவம், புரட்டஸ்தாந்து போன்றன வேர்கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்தது. அது கல்வி, மற்றும்; மனித நேயம் போன்ற வியடங்களில் சாதகத் தன்மையை ஏற்படுத்தினாலும், தற்காலத்தில் உலகமயமாக்கல் பின்னணியில் மேற்கொள்ளப்படும் அதிகளவிலான கிறிஸ்தவ மத பிரிவுகளை வளர்முக நாடுகளில் பரப்புகின்றது. இதனால் வறுமைப்படும் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். மறைமுகமாக இந்நாடுகளின்; மதங்கள் புறந்தள்ளப்படுவதோடு அமெரிக்க மதம் உலகம் முழுவதற்கும் பரப்பப்பட்டு வருகின்றது.
வளர்முக நாடுகளின் மொழிசார்ந்த பண்பாட்டம்சங்களையும் உலகமயமாக்கல் பாதித்து வருகின்றது. இன்றைய நிலையில் உச்சமானளவில் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தையும், கல்வியையும் பெற்றுக்கொள்ள அரங்கில் மொழி அவசியமாகின்றது. வளர்முக நாடகளின் மொழிகள் அந்நாட்டு மக்களாலேயே பின்தள்ளப்படுகின்றது. ஆங்கல மொழி பாவனை கட்டாயமான சூழலில் ஒவ்வொரு வளர்முக நாடும் தனது மொழிவழிப் பண்பாட்டை மாற்றி வருகின்றது. இந்நாடுகளின் மக்களது பெயர்கள், இருப்பிடப் பெயர்கள், பாவனைப் பொருட்களின் பெயர்கள், அன்றாட பாவனைச் சொற்கள் என அனைத்துமே ஆங்கில மொழியின் செல்வாக்கிற்குள்ளாகியுள்ளன. இந்த அதிதீவிரமான ஆங்கில ஆதிக்கம் உலகளவில் மொழி விருத்தியில் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு, பழக்க வழக்கம். கலை, ரசனையென அனைத்து சமூக பண்பாட்டு விழுமியங்களையும் தீர்மானிப்பதாக உலகமயமாக்கல்; மாறியிருக்கின்றது.
வளர்முக நாட்டு மக்கள் இயற்கை உணவுகளையும், பானங்களையும் தமது உணவுக் கூறுகளாக காலம் காலமாக கொண்டிருந்தவர்கள். ஆனால் இன்று அப்படியில்லை. விரைவு உணவு பொதிகளும், அமெரிக்க குடிபானமாகிய கொககோலாவின் ஆதிக்கமும் இல்லாத சாப்பாட்டு மேசைகளை காண்பதரிது. இது திடீர் மாற்றமாக நிகழ்ந்துள்ளது. இப்புதிய உணவுப் பழக்க மாற்றமானது நுகர்வு கலாசாரத்தை வளர்ப்பதோடு, பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
உடை மற்றும் அலங்கார வடிவமைப்பிலும் மேற்கு நாடுகளில் வாழும் மக்களது பாரம்பரியத்தை; வளர்முக நாட்டு மக்கள் அரைகுறையாக பின்பற்றுகின்றனர். இப்பிராந்தியத்து மக்களுக்கென தனித்துவமான ஆடைகளும், அலங்காரங்களுமுண்டு. ஆனால் அவை இன்று கைவிடப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆடைகளும், அலங்காரப் பொருட்களும் இந்நாடுகளில் வாழும் மக்களுக்கு அவசியமானவையாக மாறியிருக்கின்றன. அதனைப் பெற்றுக்கொள்கின்றன. அதிகளவு பணம் செலவிடவும் படுகின்றன. இவ்வாறு உடை சார்ந்த நடைமுறையிலும் உலகமயமாக்கல் பாதிப்பை ஏற்படுத்தி
வருகின்றது.
உலகமயமாக்கலானது வளர்முக நாடுகளின் வரலாற்றில் கூட பாதிப்பை செலுத்தி வருகின்றது. உலகில் காணப்படும் பெரும்பாலான வளர்முக நாடுகள் சில நூற்றாண்டகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளின் நேரடி மேலாதிக்கத்ததிற்குட்பட்டவையாக இருந்துள்ளன. அப்போது அந்த ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட கட்டடங்கள் இன்று தொல்லியல் எச்சங்களாக இருக்கின்றன. இப்போது மீண்டும் அவற்றை புனரமைத்து சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கு அந்நாடுகள் அக்கறை காட்டி வருகின்றன. அவ்விடத்தில் சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி புனரமைத்த நாடுகளுக்கு சென்று சேரக்கூடிய வகையிலேயே இத்திட்டங்கள்; நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இத்தோடு வளர்முக நாடுகளின் முக்கிய வரலாற்று மையங்களை தேர்ந்தெடுத்து அதனை புதுப்பித்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க வைப்பதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனூடாக வளர்முக நாடுகளின் வரலாறு கூட விற்றுக் காசாக்க கூடிய நிலையை உலகமயமாக்கல் சூழல் உருவாக்கியுள்ளது.
ஒரு சிறந்த பண்பாட்டைஉருவாக்குவதில் கலைக்கும், கலை ரசனைக்கும் முக்கிய பங்குண்டு. வளர்முக நாடுகளில் சுதேச கலைமரபுகள் இவ்வகைப்பட்டன. ஆனால் உலகமயமாக்கலின் விளைவால் அறிமுகமாகிய மேற்கு நாட்டின் அரங்கும், நாடகமும், இசையும், சினிமாவும் அதனை இல்லாமலாக்கி விட்டது. பரதநாட்டியமோ, கர்நாடக சங்கீதமோ, கூத்தோ இன்று அதிகமானவர்கள் ரசனையை ஈர்ப்பதில்லை. மேற்கு நாடுகளின் பலைகள் கலந்தவையே இன்று கலையாகப்; பார்க்கப்படுகின்றன. இது வளர்முக நாடுகளின் மக்களது ரசனையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றது.
மிதமிஞ்சிய தொடர்பு சாதனங்களின் வருகையும் எல்லையற்ற குடியேற்ற வசதிகளும் குடும்ப உறவை அந்நியப்படுத்துகின்றது. பெற்றோரை விட்டுப் பிள்ளைகள் திருமணம், கல்வி போன்ற நோக்கங்களுக்காக தூரதேசம் சென்று விடுகின்றனர். இதனால் கட்டுக்கோப்பான குடும்பங்கள் கூட இன்று சிதைவடைகின்றன.
உலகமயமாக்கல் வளர்முக நாடுகளின் பண்பாட்டை பாதகமான முறையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் தவிர்க்க முடியாத பொருளாதார கட்டமைப்புக்கள் அதனை வலிந்து ஏற்க வைக்கின்றது. வளர்முக நாடுகளில் நிலவும் ஸ்த்திரமற்ற அரசியல் நிலமைகள் அது மேலும் இங்கு விஸ்தீரனமடடைவதற்கான சந்தரப்பங்களை உருவாக்கிவிடுகின்றது. ஓவ்வொரு வளர்முக நாடுகளிலும்தறக்கப்படும் புதிய பொருளாதார சந்தைகள் இந்நாட்டு மக்களை பொருளாதார மற்றும் பண்பாடு ரீதியாக மேலும் மேலும் சுரண்டுகின்றது. ஆனாலும் கண்டுகொள்வார் யாருமில்லை.
nice essay all the best friend write this type of articles
ReplyDelete