தனித்துவமான லக்சுமி நாணயங்களின் சிதைவுகள் |
இலங்கைத் தீவானது இற்றைக்கு ஏறத்தாழ 2250க்கு மேற்பட்ட வருகால, சர்வதேச ரீதியான தொடர்பு வலையமைப்பில் பிரசன்னப்பட்டதொரு தேசமாக விளங்குகின்றது. அரசியல், சமயம், காலாச்சாரம், வணிகம் ஆகிய பண்பாட்டுத்துறைகளில் இத்தொடர்பு நீண்டிருக்கின்றது.
இப்பண்பாட்டுத்தொடர்புகளுக்குள்ளும், வர்த்தக வட்டத்துக்குள்ளும், காலந்தோறும் பல புதிய வகையான நாணயங்களும், வகைகளும் உள்நுழைந்து கொண்டன. கிரேக்க. இந்தோ கிரேக்க. ரோம நாணயங்களும், வட இந்திய, தென்னிந்திய நாணயங்களும், பேர்சியன், சசானியன் நாணயங்களும், ரோமராச்சியத்தின் பிந்தைய, முந்தைய கால நாணங்களும் மற்றும் பைசாந்திய நாணயங்களும் கிழக்குப் பிராந்திய நாணயங்களும் பல்வேறு காலப்பகுதிக்குரியதாக இலங்கையில் கிடைத்துள்ளன. இவ்வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கும் இடங்கள் தொல்லியல் ஆய்விலும், வரலாற்றாய்விலும், எழுத்தியலிலும் வணிக பண்பாட்டு மையத்தை அடையாளப்படுத்தும், அவ்விடத்தின் கேந்திரத்தன்மையை சமிக்ஞையிடும் முதுகெலும்பாதாரமாக விளங்குகின்றது. மேல்கண்ட வகையில் பிராந்தயி அமைப்பு ரீதியாக இலங்கையில் கிடைதத் அயல்நாட்டு நாணயங்களை நோக்கலாம்.
இலங்கையுடன் நீண்ட காலமளவில் வணிக, கலாச்சார ரீதியான தொடர்புகளை பேணிய நாடு என்ற வகையில் தென்னிந்தியாவுக்கும் அதனைத் தொடர்ந்து வடஇந்தியாவுக்கும் முண்டு. இலங்கையில் அனுராதபுரம், கந்தரோடை, பெம்பரிப்பு, அக்குறுகொட, ப+நகரி, திஸ்ஸமகாராம பகுதிகளில் சங்ககாலத்திற்குரிய நாணயங்கள் பல கிடைத்துள்ளன. வட இலங்கையில் இதுவரை கிடைத்த பெரும்பாலான சங்ககால நாணயங்கள் பாண்டிய வம்சத்திற்குரியன. 1917 போல் பீரிஸ் என்பவர் கந்தரோடையில் சில பாண்டிய நாணயங்களை கண்டெடுத்தார். அண்மையில் இரா. கிருஸ்ணமூர்த்தி எழுதிய நூலில் கந்தரோடையில் கிடைத்த நாணயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. இதில் இவை பெருவழுதி நாணயமென அடையாளம் காணப்பட்டது. சமீபகாலங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா கந்தரோடையில் சில சங்ககால நாணயங்களை கண்டெடுத்து அவற்றுள் “சிவ” என்ற பொறிப்புள்ளதாக வாசித்தும் காட்டினார். இவற்றுள் முதலிரு நாணயங்களும் சதுரவடிவிலும், வட்டவடிவிலும் உள்ளன. பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் ப+நகரியில் 17 வரையான சங்ககால பாண்டிய நாணயங்களைக் கண்டெடுத்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை சதுர வடிவிலும். செப்பினால் செய்யப்பட்ட வகையிலும், மீன் கோட்டுருவமும், யானை வேலியிடப்பட்ட மரம், மூன்று முகடுள்ள மலை, கொடிமரம் போன்றவற்றை தாங்கியதாகவுள்ளது. பண்டைய அனுராதபுர நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் (ஸல்கஹவத்தவில்) தென்னிந்திய ஆட்சியாளர் குறிப்பாக பாண்டியரது நாணயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும் காலத்தால் முந்திய சைத்தியத்தின் கூரைப்பகுதியை காட்டும் நாணயம் இதுவாகும். முற்புரத்தில் யானை, கோயில் ஆகியவையும் மறுபுரத்தில் மரமும் உள்ளன. ஆ.மிக்சினர் இந்நாணயங்கள் கி.மு.210 – 177 க்கும் இடையான காலத்தைச் சோந்ததென கூறுவர். இத்துடன் இரண்டாம் பாண்டிய பேரரசுக்குரிய நாணயங்கள் ப+நகரியிலும் அனுராதபுரத்திலும் கிடைத்துள்ளன. அவற்றுள் ப+நகரியில் கல்முனை, வெட்டுக்காடு, ஈழவ+ர் ஆகிய இடங்களில் 4 நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் மூன்றில் பழனி என எழுதப்பட்டுள்ளது. நான்காவது நாணயம் மேற்கூறப்பட்ட நாணயங்களை விட சிறிதாயும் அதிலுள்ள எழுத்து தெளிவற்றனவாகும் உண்டு. அனுராதபுர பாண்டிய நாணயங்கள் இரண்டும் 2ம் பேரரசு காலமாகிய 9ம் நூற்றாண்டுக்குரியதாகலாம் என சட்டோபத்தியாய் தெரிவிப்பார். எனவே தென்னிந்தியாவில் சங்ககாலம் தொட்டு இரண்டாம் பாண்டியர் காலம் வரையான பகுதிகள் இலங்கையில் பல பகுதிகளுடன் பாண்டிய வணிக பண்பாட்டு தொடர்புகளைப் பேணியிருக்கின்றனர்.
இலங்கையில் பல பண்பாட்டு மாற்;றங்களை நிகழ்த்தியவர்களான சோழர்களது நாணயங்களும் சங்க காலம் தொட்டு இராஜேந்திசோழன் வரையிலான நாணயங்களும் கிடைக்கின்றன. வட இலங்கையில் ப+நகரி வட்டாரத்தில் இரு சங்க கால சோழர் நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள்; ஒன்றில் புற உருவம் சோழ நாணயங்களில் வழக்கமாக இடம்பெறும் இடப்பக்கம் நோக்கி நிற்கும் நிலைக்கு மாறாக வலப்பக்கம் திரும்பியுள்ளது. மற்றையது தமிழ் நாட்டில் கிடைத்து வரும் அதே வடிவத்தை ஒத்துள்ளது. செப்பினால் ஆன இந்நாணயங்கள் புலியுருவத்துடன் யானை, தேரின் சக்கரம் போன்றனவும் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்தும் இராஜராஜன். இராஜேந்திர கால நாணயங்கள் அனுராதபுரம், மாதோட்டம், பொலநறுவை, ப+நகரி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. ப+நகரியில் 1ம் ராஜராஜன் காலத்துக்குரிய செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. முன்பக்கம் மன்னன் நிற்கும் நிலையிலும் பின்பக்கம் இருக்கும் நிலையிலும் காணப்பட, இடது புறத்தில் தேவநாகரியில் “ஸ்ரீராஜராஜ” என பொறிக்கப்பட்டுள்ளது. இவன் கால நாணயங்களை இரண்டாக பிரிப்பர். முதலாவது வகை புலி, வில், மீன் போன்ற இலச்சினைகளும். இரண்டாவது வகையில் மன்னன் முற்பக்கத்தில் நிற்கும் நிலையிலும், காணப்படும். இங்கு இவ்விரண்டாவது வகை நாணயமும், பொலநறுவையில் முதலாவது வகை நாணயமும் கிடைத்துள்ளன. மட்டுவில் நாட்டில் பொன் நாணயம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. சோழர்கள் பொன் நாணயங்களையும் வெளியிட்டவராவார்.
![]() |
இலங்கையில் மீட்கப்பட்ட இராஜராஜனின் தங்க நாணயம் |
பல்லவ நாணயங்களும் இலங்கையில் பரவலாக கிடைத்தள்ளன. மாதோட்டம், அனுராதபுரம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. ப+நகரி உதவி அரசாங்க அதிபர் சிங்க இலச்சினை பொறித்த பல்லவ நாணயங்களை சேகரித்துள்ளார். இது சதுர வடிவில் வெள்ளிமுலாம் ப+சப்பட்ட நாணயமாகும். இதன் முன்பக்கத்தில் குதிரை வடிவிலாமைந்த முகமும் (சிங்கம் என்பாருமுண்டு) பின்புறத்தில் வட்டமும் அதன் நடுவில் நான்கு புள்ளிகளும் உண்டு. இதுபோன்ற அதிகளாவான நாணயங்கள் அனுராதபுரத்தில் மீட்கப்பட்டுள்ளன. இதனை கொற்றிங்ரன் சிங்கள நாணயமென்பர். இவற்றின் ஊடாக பல்லவ வணிக கணங்கள் இலங்கையுடன் கொண்டிருந்த தொடர்பை அறியலாம்.
சில செப்பு அல்லது வெண்கல நாணயங்கள் மன்னார் மதவாச்சி வீதியின் கீழ்ப்பக்கத்திலும், அனுராதபுரத்திலும் மீட்கப்பட்டுள்ளன. இவை சோழர்களுக்கான 11ஆம், 12ஆம் நூற்றாண்டுக்குரியது என கணிக்கப்பட்டுள்ளது. இதில் நிற்கும் நிலையிலான யானையும், குதிரையும் உள்ளன. இவற்றை வேளைக்கார படையினர்ஃவணிகர்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனப்படுகிறது. ப+நகரியில் காலத்தால் முந்திய புராணஸ் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியவிலும், இலங்கையிலும் பயன்படுத்தப்பட்ட காலத்தால் முந்திய நாணயம் இதுவாகும். இலங்கையில் இதன் தோற்ற காலம் கி.மு.500க்கும் கி.மு.100க்கும் பயன்பட்டதற்கு ஆதாரமுண்டு. இந்தியாவில் கி.மு.1000 என கணிப்பிடப்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இது ஒரே காலத்தில் மங்கிப்போவதால் வணிகத்தில் முக்கிய பங்குவகித்த நாணயம் எனலாம். செம்பிலும், வெள்ளியிலும் வேறு சில வெள்ளி முலாம் ப+சப்பட்ட நாணயங்களாகவுள்ளன. வட்ட வடிவத்திலும், முட்டை வடிவிலும் இவையுள்ளன. முன் பக்கத்தில் நட்சத்திர வடிவில் அமைந்த உருவங்களும், பின்பக்கத்தில் தெளிவற்ற சில கோடுகளும் உண்டு. இதனையடுத்து சமகாலத்தில் இரு தேசங்களிலும் பயன்பட்ட நாணயங்களாக இலக்குமி நாணயங்களுள்ளன. ப+நகரி உட்பட பல இடங்களில் இவை மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் வட இந்திய நாணயங்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் மகத, மௌரிய பேரரசுக்குரிய “கார்~h” பணம் அனுராதபுரம் (கெடிகே) அக்குறுகொடவிலும் மீட்கப்பட்டுள்ளன. பண்டைக்கால முத்திரையிடப்பட்ட கர்~h நாணயங்களை நாணயவியலாளர் இரு தொகுதியாக வகைப்படுத்துவர். உள்@ர் பாவனைக்கானது. ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் அதிகாரத்தின் கீழ் பேரரச பாவனைக்காக அடிக்கப்பட்டது. என்பவை இரு வகை ஆகும். இப்பேரரச நாணயங்கள் மேலும் இருவகையாக பிரிக்கப்படும். அவற்றுள் ஒன்று மௌரியர் காலத்துக்கு முற்பட்டவையும், ஆரம்ப காலத்தையும் சேர்ந்தவை, இரண்டாவது மௌரிய நடுப்பகுதியை சேர்ந்த தடித்த நாணயங்களாகும். இலங்கையில் மிட்கப்பட்டது இவ்விரண்டாவது வகை ‘கர்~h’ பணம் என குறிப்பிடுவர். இவை செப்பு உள்ளீட்டையும், வெள்ளி மேற்ப+ச்சினையும் கொண்டவை. இவை கி,மு.3ஆம். 2ஆம் நூற்றாண்டுக்குரியன. இலங்கைகுரியதாக கருதப்படும் யானையும், சுவஸ்திகாவும், குதிரையும், சிங்கமும், மாடும் ஸ்வஸ்திகாவும், லக்சுமி உருவ நாணயமும் உஜ்ஜெயின், சதாவாஜன, மகாகர்சப நாணயங்களை பின்பற்றி அமைக்கப்பட்டவையாகும்.
![]() |
சில தங்க நாணயங்கள்- கொழும்பு நூதனசாலை |
முத்திரைக் குறியிட்ட நாணயங்கள் மௌரிய பேரரசின் தேய்வின பின்னர்; இந்தியாவில் மேலும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் மிகவும் காலத்தால் முற்பட்ட நாணயங்களுக்கு பதில் இந்தோ – கிரேக்க நாணயங்களும், அவற்றை தொடர்ந்து இந்தோ – பார்த்தீனிய நாணயங்களும், குசானியரது நாணயங்களும் வெளியிடப்பட்டன. வேறுபட்ட அரசியல் கலாச்சாரங்களை கொண்ட இவ்வரசுகளின் நாணயங்களும் இலங்கையில் காணப்பட்டன. ‘கார்~பண’ நாணயங்களுக்கு அடுத்த வகையில் இலங்கையில் காணப்பட்ட மிகப்பழைய நாணயம் இந்தோ – கிரேக்க மெனாண்டரின் இந்திய நியம கிரேக்க வெள்ளி நாணயமாகும். இலங்கையில் முன்னர் தெரியப்பட்டிராத சோற்றா மெகஸ் என்பவரின் 10 நாணயங்கள் தனியார் சேகரிப்புக்களில் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை தீவின் தென்பகதிக்குரியன.
அண்மைய கண்டுபிடிப்புக்கள் சோற்றர் மேகஸ் என்பவரின் வம்சாவழிப் பெயர் விமதந்து என்பதையும், அவர் குசானிய மன்னர் 1ஆம் கனிஸ்கனின் பாட்டனார் என்பதையும் கூறுகின்றது. கனி~;கனின் இரண்டு தங்க நாணயங்கள் அண்மையில் அக்குறுகொடவில் கண்டுபிடிக்கப்பட்டன. அதுபோல் ஜேதாவனராம அகழ்வாய்வில் 11ம் கனி~;கனின் நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இரு தனியார் சேகரிப்பிலும் இதே மன்னர்களின் பத்து நாணயங்கள் சேகரிக்கப்பட்டன. இவை தென்பகுதியில் கண்டபிடிக்கப்பட்டவை. கொற்றிங்ரன்;; மன்னன் வாசுதேவனின் நான்கு மாதிரி நாணயங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறுவர். இதில் மன்னனது பாதிமுகம் தெரிகின்றது. இது.கி.பி. 185 – 220 வரையான காலப்பகுதிக்குரியது.
மேற்கு ~தீரபஸ்கச் சேர்ந்த வீரதாமனின் வெள்ளி நாணயமொன்று 2ஆம் கனி~;கனின் நாணயத்துடன் தூபியின் முகப்பு பாகத்தினடியில் புதைந்திருந்தது. இலங்கையின் வடபாகத்தின் வல்லிபுரத்திலிருந்து கி.பி.2ஆம், 3ஆம் நூற்றாண்டுக்குரிய, நிற்கும் யானையை தாங்கிய கௌதம புத்தனது நாணயமொன்று கிடைத்தது. இவன் ஆந்திர வம்சத்துக்குரிய சாதவாகன கௌதம புத்திரரால் மீள அடிக்கப்பட்ட நாகபாண நாணயமொன்றும் மீட்கப்பட்டது. கொற்;றிங்ரனால் பட்டியற்படுத்தப்பட்ட ஆந்திரர்களின் வெள்ளி நாணயங்களும், குப்த வம்சத்தை சேர்ந்த சந்திர குப்தன், ஸ்கந்த குப்தன் ஆகியோரின் கி.பி.3ம், 4ஆம்,5ஆம் நூற்றாண்டுகளுக்குரிய பொன் முலாமிட்ட நாணயங்களும் கிடைத்துள்ளன. இவையே இலங்கையிலும். இந்தியாவிலும், பண்டைய இந்திய வம்சங்களால் வெளியிடப்பட்ட நாணயங்களாகும். இலங்கையில் பெருமளவில் காணப்பட்ட உரோம நாணயங்கள் கி.பி.4ஆம். 5ஆம் நூற்றாண்டில் எழுச்சியடைந்த வணிக உறவினை காட்டுகின்றது. இலங்கையில் கிடைத்த உரோம நாணயங்கள் பற்றி ஆராய்ந்தோரில் ஸ்ரில், கொற்றிங்ரன், மக்டொவல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். கொற்றிங்ரன் கி.மு.144க்கும் 49இற்கும் இடைப்பட்ட எட்டு வகை நாணயங்கள் கிடைத்ததாக குறிப்பிடுகிறார். மக்டொவல் என்ற அறிஞர் கி.பி 1ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை 14 ரோம பேரரசு நாணயங்கள் இலங்கையில் கண்டுபிடித்ததாக குறிப்பிடுகிறார். அவை ரைபீரியஸ் (கி.பி.14 – 37) மொமிரியன் (81 – 96) ஹாட்ரியன்(117, 18), லூசியஸ் வேஹல் (161 – 169), மார்க்கஸ் உறிவியல் ( 161 – 180) வோஸ்ரினாத – கங்கர் (175) கொமே~யஸ் (180 – 193) கெற்றா (211 – 117) ய+லியர் டொமனா (217) ய+லிய் மம்மியா (235), எல்டர் (244 – 249) ஆகிய மன்னர் கால நாணயங்களாகும். இந்நாணயங்கள் தென்னிந்திய வணிக பாதைய+டாக இலங்கை வந்ததென துறைசார் அறிஞர்கள் கூறுவர். இப்பதின்நான்கு நாணயங்களுடன் இலங்கையில் அண்மையில் கண்ட பிடிக்கப்பட்ட மூன்று நான்கு பக்க நாணயங்களை சேர்க்கலாம்.
01. நீரோவின் நான்காம் ஆண்டுக்குரிய நாணயம் (கி.பி57ஃ58) .
02. நான்கு பக்க நாணயம் ஓகேலியனின் ஆறாவது ஆண்டை சேர்ந்த நாணயம் (கி.பி.274ஃ5) தனியார் சேகரிப்பில் உள்ள ஒரு ஆரம்ப ரோமப் பேரரசு கால நாணயத்தையும் சேர்க்கும் போது 17 ஆக அதிகரிக்கும். பிற்கால ரோம பேரரசு கால ஆயிரக்கணக்கான நாணயங்கள் நாடு முழுவதும் கிடைத்துள்ளது. மலர் வளையத்தின் நடுவே சிலுவை வகை என்பவற்றை கொண்ட சாதாரண மூன்றாம் வகை பித்தளை நாணயங்கள் தவிர சொற்ப மலர்வகை நாணயங்களே அறியப்பட்டிருந்தன. 1982, 83 கலாசார முக்கோண வலய அகழ்வுகளின்போது மூன்று இவ்வகை நாணயங்கள் கிடைத்தன. ஒன்று 317இல் ரோம நாணயசாலையில் அடிக்கப்பட்டது. மற்றது கி.பி 330ஃ3 ஐ சேர்ந்த அன்றியோக்தைக்குரியது. மூன்றாவது கி.பி 337 – 340க்குரிய கொன்ஸ்தாந்நேபிளை சேர்ந்தது. இலங்கையில் பிரான்சிய தொல்பொருள்துறை நடாத்திய அகழ்வில் மூன்றாம் பித்தளை நாணயங்களையும், அதையொத்த போலி நாணயங்களும் எடுக்கப்பட்டன. கிராமவாசி ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட ரோம பேரரசு நாணயப் பெட்டி 18 ரோம மூன்றாம் வகை பித்தளை நாணயங்களை கொண்டிருந்தது. ஐரோப்பிய - இலங்கை வணிகத்தில் 10, 11ஆம் நூற்றாண்டுக்குரிய வெண்கல நாணயமொன்று கண்டெடுக்கப்பட்டது.
![]() |
உரோம் மன்னன் கொன்ஸன்ரைனின் நாணயம் |
வட இலங்கையின் புராதன தொல்லியல் மையங்களான மாதோட்டம், ஆனைக்கோட்டை, மண்ணித்தலை, ப+நகரி, வெட்டுக்காடு. வரணி, நாகர்கோவில், வல்லிபுரம் ஆகிய இடங்களில் கி.மு 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 6ம் நூற்றாண்டு வரைக்குமான உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை ரோமிலிருந்து நேரடியாக வந்தவை. இந்திய பரப்பிலிருந்து வந்தவை, உள்நாட்டில் செய்யப்பட்டவையென சொல்லப்பட்டாலும் பல பொது தன்மைகளை கொண்டுள்ளன. மன்னனது தலை, இரண்டு போர் வீரர்கள் காவல்காக்கும் உருவம், சிலுவை இணைந்த வட்டங்கள் போன்றன இவ்வாறானவை சிலவற்றில் மன்னனின் பெயருமுண்டு. அகஸ்;டிஸ், குளோடியஸ், நீரோ, டொண்ரியம், எரம்பிரியஸ், ஹடிகியன், ய+தலியா டொமன். போர்த்துமல்ஸ் போன்ற மன்னர்கால நாணயங்கள் கிடைத்துள்ளன.
கந்தரோடையில் அகழ்வுப்பணிகளை மேற்கொண்ட போல் பீரிஸ், விமலா பேக்லீ, பேரா.கிரு~;ணராஜா போன்றோர் பல காலங்களுக்குரிய ரோம நாணயங்கள் இங்குள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கொன்ஸ்ரன்ரைன், வலன்ரைன், அக்ரேரியஸ், இந்தோ – ரோம நாணயம் என்பவை சிறப்பாக குறிப்பிடத்தக்கன. பேரா.கிரு~;ணராஜா பொன் நாணயம் மீட்டதாக கூறியுள்ளார். வரணியில் பேரா.பு~;பரட்ணம் 600க்கு மேற்பட்டட ரோம நாணயங்களை மீட்டள்ளார். அதுபோல் ப+நகரி, மண்ணித்தலை, வெட்டுக்காடு பரப்பில் கி.பி.முதலாம் நூற்றாண்டுக்கும் கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையிலான உரோம நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ரோமரை தொடர்ந்து சசானியரது நாணயங்கள் இலங்கையில் சேகரிக்கப்பட்டுள்ளன. சசானிய மன்னன் 1ஆம் யெஸ்டிகேட்டின் மூன்று நாணயங்கள் கொற்றிங்ரனால் கண்டெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. இதுவரை இலங்கையில் அறியப்படாத மூன்று சசானிய நாணயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஒரே முற்பக்க மறுபக்க மாதிரிகளை கொண்டவை. மார்புப் பாகம் மேலே இளம்பிறை, சுவாலைகளுடன் கூடிய தீப்பீடமும்; காணப்படுகின்றன. சசானியரை தொடர்ந்து உண்டான அரேபிய – சீன நாணயங்கள் இலங்கையில் காணப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் வணிக உறவுகளிருப்பினும், 11ஆம் நூற்றாண்டில் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டன. அனுராதபுரம், பொலநறுவ பகுதியிலும், யாப்பகூவ, குருணாகலை. தம்பதெனியா, ஆகிய நகரங்களிலும் சோங் சென் சோங் வம்சங்களுக்குரிய நூற்றுக்கணக்கான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை வட்டவடிவான செப்பு நாணயங்களாகும்.
இதனைத் தொடர்ந்து இலங்கையினது அரசியலில் அந்நியரது ஆட்சி நேரடியாக ஏற்பட்டதால் அவர்களது நிர்வாக அமைப்பின் கீழ் இலங்கை வளரவேண்டியிருந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்றோரும் தமது நாணயங்களை இலங்கையில் வெளியிட்டவர்களாவர். மாதோட்டம், திருகோணமலை, காலி. கொழும்பு, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள், ப+நகரியின் பலபகுதிகள். முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இவர்களது நாணயங்கள் பரவலாக கிடைத்துள்ளன. இவற்றை வெளிநாட்டு நாணயங்கள் என்பதைவிட வெளிநாட்டவர் உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு பாவனைக்காக இலங்கையில் வெளியிட்ட நாணயங்கள் என குறிப்பிடலாம்.
இலங்கையில் கிடைத்த அயல்நாட்டு நாணயங்களை மேற்கண்ட வகையில் பிராந்திய ரீதியாக வகைப்படுத்தலாம். இனிவரப்போகும் காலங்களில் இடம்பெறவுள்ள ஆய்வுகளால் இன்னும் பல புதிய வகையிலான அயல்நாட்டு நாணயங்கள் கிடைக்கலாம். கிடைத்துள்ளவற்றை கொண்டு தீவின் கேந்திர தன்மையின் முக்கியத்துவத்தையும், வணிகத்தில் ஈடுபட்ட நாடுகள் அவற்றின் சமகால அரசியல், கலாசாரத் தொடர்புகள் எனப் பல்வேறு விடயங்களை உணர்ந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment