![]() |
மஹிந்த தேரரின் இலங்கை வருகை |
நூலின் பெயர் : மகாவம்சம்
காலம் : கி.பி.3ம் - 6ம் நூற்றாண்டுகள்.
பாடியவர் : மகாவிகாரையைச் சேர்ந்த மகாநாமதேரர்.
நூல் நோக்கு : “புனித பெருமக்களின் மன எழுச்சிக்கும், ஆனந்தத்திற்குமான……”
நூல் வகை : மதச்சார்புடைய காவியஃவம்சஃவரலாற்று நூல்.
இவ்வாறாறுதான் அந்த வரலாற்று நூலுகான எளிய அறிமுகத்தை வழங்கலாம். அது முன்பிருந்து பேணப்பட்டு வந்த மரபுகளின், ஜதீ;கங்களின் இறுதித் தொகுப்பாக விளங்குவதோடு, பல்வேறு மூல நூல்களின் கலப்பாகவும் இருக்கின்றது. இதனுள் இலங்கைத்தீவின் வரலாற்றுத் தொடக்க கால நிலமைகள், குடியேற்றங்கள், பௌத்த வருகை, அனுராதபுர காலம் வரையிலான மன்னர்களின் வம்சப்பட்டியல், அவர்களின் சமய, பொருளியல், பண்பாட்டு பணிகள் போன்றன உள்ளடங்குகின்றன. இவ்விடயப் பொருள் யாவும் இலக்கிய படைப்பாளியின் விருப்பு, வெறுப்பிற்கமைய சில விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டு அதிக அத்தியாயங்களிலும், சில அரிய விடயங்கள் குறைக்கப்பட்டு ‘தேவையற்றனவாக’ காட்டப்பட்டுள்ளது. அவை வரலாற்றிலும் “மற்றமையாக” இன்று வரை நோக்கப்பட்டும் வருகின்றன. மிகை அத்தியாயங்கள் தரும் செய்திகள் பெரும்பாலும் யதார்த்தம் கடந்த கற்பனை இயலாகவே காணப்படுகின்றது. இம்முரண்மிகு பௌத்த சார் படைப்பியல்பிற்கு படைப்பாளன்; வாழ்ந்த காலச்சூழ்நிலை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காலச்சூழ்வமைவுகளை விளங்கிக் கொள்வதனூடாகவே, இவ்விலக்கியத்தின் உண்மைத்தன்மைகளை வரைவுபடுத்திக் கொள்ள இயலும்.
ஆரம்பகாலம் முதல் இற்றைவரை இந்திய துணைக்கண்டத்தில் நிகழ்ந்த, நிகழும் மாற்றங்கள் இலங்கையின் வரலாற்றையும் அதன் அரசியலையும் பாதித்தே வந்துள்ளது. குறிப்பாக இலங்கையின்; தொடக்க காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த அசைவுகள் இங்கு பேரசைவுககளேயே நிகழ்த்தி போயிருக்கிறது. மகாவம்சம் படைக்கப்பட்ட காலப்பகுதியில் தமிழகம் புதியதொரு பண்பாட்டுத்தடத்தில் பயணிக்கத் தொடங்கியிருந்தது. நிலவுடமை சமூகப் பின்னணியில் வீசிய பக்தி இயக்கம், களப்பிரர் காலம் முதல் வேர் கொண்டிருந்த பௌத்த தத்துவத்தை அங்கு வீழ்ச்சிக்குள்ளாக்கியது. மனித வாழ்வை நிர்வாணமாய் பார்க்கும் பௌத்த, சமண தத்துவங்கள் நிலவுடமை சமூகத்தை எதிராக காட்டுவதனால் அல்லது இதற்கு எதிராக அது இருப்பதால் ஆழ்வார்களும், நாயன்மார்களும் அதற்கு எதிராக பக்தி இயக்கத்தை தொடங்கி முன்னெடுத்தனர். பேரசுத்தனத்தோடு இயங்கிய இந்து, வைணவ பக்தி இயக்கத்திற்கு முன்னால் பௌத்தம் சரியத் தொடங்கியது. பிக்குகள் ஆதரிப்பாரின்றி புலம்பெயர்ந்தனர்.ஏழாம் அறிவில் வரும் போதிதர்மன் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழக நிலை இவ்வாறிருக்க வடஇந்தியாவிலும் பௌத்த மதத்திற்கு எதிரான அரசியல் நிலமைகளே காணப்பட்டன. வேதகாலத்தை தொடர்ந்து, அங்கு அசோகனால் அரசமதமாக்கப்பட்டிருந்த பௌத்தம், மீள் எழுச்சி பெற்றுவந்த இந்து மதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. வடஇந்தியவில் குப்த மன்னர்கள் மனுதர்மத்தின்படி இயங்க மிகப் பெரிய இந்துப்பேரரசையே உருவாக்கியிருந்தனர். இவ்வாறு இந்தியாவில் எழுச்சியடைந்து வந்த ஆகமம் சார்ந்த பக்தி இயக்கத்தினால் அங்கிருந்த பிக்குகள் இலங்கை நோக்கி புலம் பெயர்ந்தனர். அவர்களால் இலங்கையில் பௌத்தம் பேரெழுச்சியடையச் செய்யப்பட்டது. இலங்கையில் இந்து பக்தி இயக்கத்திற்கெதிரான ஆயுதமாக பௌத்தம் பயன்படுத்தப்பட்டது. இங்கும் தமிழகத்தைத் தழுவிய தீவிர இந்துக்களாக மாறிவந்து இந்துமத செல்வாக்கினை கட்டுப்படுத்தும் வேலையை மகாவம்சத்தினூடாக படைத்தனர். குறிப்பாக சமகாலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழகத்திலிருந்து பாடக்கூடிய புகழ்மிகு இந்துக் கோயில்கள் இங்கிருந்திருக்கின்றன. பெருகிவரும் இந்துப் பேராபத்திலிருந்து பௌத்தமதத்தை இலங்கையில் மட்டுமாவது காப்பாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தினால், “புனித பௌத்தமதம் நீண்டகாலம் நிலைபெற்று வரும்தீவு” இலங்கையை குறித்து வைத்தனர். அதற்காக அதன் வரலாற்றை பௌத்த சாயலில் வளர்க்க முற்பட்டனர்.
இந்த இலக்கியம் பாடப்பட்ட காலத்திலும் அதற்கு முன்பும் தமிழர்களின் படையெடுப்புக்கள் நில படர்ச்சிகள் நிகழ்;ந்து வந்திருக்கின்றது. மகாநாமதேரர் தன் காலத்திலும் இதனை எதிர்கொண்டிருக்கின்றார். வடக்குத் தமிழர்களின் படையெடுப்புக்கள் பற்றிய கதைகள் அக்காலத்தில் உலவியிருக்கின்றன. அதில் எல்லாளன் சேனன், குத்திகன் போன்ற உள்@ர் தமிழ் ஆட்சியாளர்கள்; முக்கிய இடம்பிடித்திருக்கின்றனர். மகாவம்சம் இவர்களை அந்நிய நாட்டவர் என்றே காட்ட விளைந்திருக்கின்றது. ஆனால் சமகாலத்தில் இலங்கையின் வடபாகத்தில் தமிழர் அரசொன்று உருவாகிவிட்டதை பல்வேறு சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கையின் வரலாற்றுத் தொடக்க காலத்திற்கு முன் நிலவிய திராவிட, ஆரியப் பண்புகளுடன்; கூடிய பன்மைத்தன்மை கொண்ட ;தீவை இதில் தனிச்சிங்களத் தீவாக காட்ட முனைந்துள்ளார். எல்லா தமிழ் படையாளர்களும், தமிழர்களும் அந்நியரென்றும், படையெடுப்பாளர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். பல்லவ பக்தி இயக்கத்தின் பயனாக இலங்கையில் இந்து மதத்தை ஆதரித்த தமிழர்களை எதிரியாக வரலாற்றில் கட்டமைக்கவே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்;. சிங்கள மன்னர்களை நோக்கி அடிக்கடி நிகழ்ந்த தமிழ்ப்படையெடுப்புக்களின் காரணமாக ஆட்சியின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே கடினமாக இருந்தது. துட்டகாமினி தொடக்கம், விஜயபாகுவரை பிரதான மன்னர்கள் யாவரும் தமிழர் படையெடுப்பிற்கு பயந்து ஒளிந்து வாழவேண்டிய சூழல் நிலவியது. இதுவே மகாநாமதேரர் கால மன்னனாகிய தாதுசேனனுக்கும் நிகழ்ந்தது. அதாவது பாண்டு என்ற தமிழன் படையெடுப்பினால் அவனும் பிக்குகளுடன் மறைந்து வாழ வேண்டியேற்பட்டது. இந்நிலமைகளை சிங்களவர்களுக்கு சாதகமாக காட்டுவதற்கு, மன்னருக்கும், மகாவிகாரைக்கும் எதிரானஃ ஒத்துவராதவர்களை மக்களுக்கும், வரலாற்றுக்கும் எடுத்துக்காட்டவே, தனது காலச்சூழலை மகாவம்ச ஆசிரியர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். மேல் குறிப்பிட்டபடி இக்காலத்தில் உருவாகியிருந்த தமிழர் விரோதப்போக்கினை, மகாவம்சத்தின் “துட்டகாமினியின் வெற்றி” என்ற 25வது அத்தியாயத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னன் :- “மரியாதைக்குரியவர்களே! பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த
எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும்?”
பிக்குக்கள் :- “நீ சுவர்க்கம் செல்ல இந்த ஒரு செயல் தடையாக இருக்காது.
உன்னால் ஒன்றரை மனிதரே உயிரிழந்தனர்.
பௌத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும்,
தீயவர்களுமான ‘மற்றவர்கள்’ மிருகங்களைபோல கருதப்படவேண்டும்”
- மகாவம்சம் 25ம் அத்தியாயம், 19 வரி-
பல்லவர் காலத்தில் எழுச்சி பெற்றுவந்த கடலாதிக்கமும், வணிக கணங்களின் தோற்றமும் சமகால இலங்கைக் காலச்சூழலை பாதிப்புறச் செய்து வந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டில் பல்லவர் சார்ந்தவர்களாலும், தமிழர்களாலும் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போயின. சமகாலத்தில் பல்லவர்கள் தமிழகத்தின் இயற்கை எல்லையையும் தாண்டி அரசியல் மேலாதிக்கமும், பண்பாட்டு மேலாதிக்கமும் செலுத்தி வந்தனர். இவ்வாறான அரசியலுறவுகள் பற்றிய செய்திகள் தமிழக ஆதாரங்களில் இருந்து கிடைக்கின்றன. குறிப்பாக படையெடுப்புக்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மானவர்மனுக்குதவியாக வந்த தமிழ்ப்படைத் தலைவர்களினாலும், உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்களும் சிங்கள அரசுக்கு எதிராக போரிடும் திறமை காணப்பட்டது. உதாரணமாக கி.பி 6ம்,7ம் நூற்றாண்டு வரை வடஇலங்கை அரசியல் நிலைபற்றி மகாவம்சத்தில் எதுவும் குறிப்பிடாத மகாநாமதேரர், இக்காலத்திலிருந்து நாகதீபம், உத்தரதேசம் போன்றவற்றில் இருந்து அனுராதபுரம் நோக்கி படையெடுத்ததாக குறிப்பிடுகிறார். மேலும் பல்லவர் காலத்துடன் உருவாகி வந்த சுய ஆதிக்கம் மிக்க வணிக கணங்களும் மறைமுகமாகவேணும் இலங்கையின் அரசியலையும், இடங்களையும் ஆக்கிரமித்து வந்தன. இலங்கையின் கரையோரப்பட்டிணங்களிலும், தலைநகரான அனுராதபுரத்திலும் பிற உள்@ர்ப்பட்டிணங்களிலும் தமிழகத்திலிருந்து வந்த வணிக கணத்தவர் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். மணிக்கிராமம், நான்கு நாடு எனும் வணிக கணங்களை பற்றிய குறிப்புக்கள் இலங்கை சாசனங்களில் காணப்படுகின்றன. நான்கு நாட்டாரும், செட்டிகள் பலரும் அனுராதபுரத்திலே நிலைகொண்டிருந்தனர். ஹோப்மட்டிகம என்னும் இடத்தில் மணிக்கிராமத்தினரின் குடியிருப்புக்கள் அமைந்திருந்தமையும் கவனத்திறகுரியது. வணிகச் செல்வாக்கினால் பெருகிவந்த தமிழர் பொருளாதாரம் அனுராதபுரத்தில் ஆட்சி செய்ய வேண்டிய மன்னர் யாரென்பதை தீர்மானிக்கும் பொறுப்பு வரை நீடித்திருந்தது.
மகாநாம தேரர் வாழ்ந்த காலப்பகுதியானது பௌத்த மதத்திற்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்த அரசியல் சூழமைவுகளை கொண்டிருந்தது. மகா விகாரையை சேர்ந்த தேரவாதிகளும் அபயகிரி விகாரையை சேர்ந்த மகாயானிகளுக்கும் இடையே நிலவிய சமயப்போட்டியானது அரசாட்சியிலும், வாழ்வு முறைகளிலும் இக்காலத்தில் இரு பெரும்பிரிப்புக்களை உருவாக்கியிருந்தது. மகாநாமர் மகாவிகாரையை சேர்ந்த தேரர் ஆனபடியினால் தேராவாதத்தையே மகாவம்சத்தின் காவியப் பொருளாக கொண்டார். தேராவாத பௌத்ததிற்கு ஆதரவளித்த மன்னர்களையும், மக்களையுமே உண்மையான பௌத்தர்களெனக் காட்டியுள்ளார். குறிப்பாக தேராவாத பௌத்த மன்னர்களுக்கே அதிக இடம் மகாவம்சத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காவியநாயகனாக துட்டகாமினி படைக்கப்பட்டமைக்கு ஒரே காரணம் அவன் ரோவாத பௌத்தனாக இருந்தமையே ஆகும். 37 அத்தியாயங்கள் கொண்ட மகாவம்சத்தில் 4 அத்தியாயங்களில் துட்டகாமினி மகாவிகாரை கட்டிய வரலாறு, அதற்கு அளித்த தொண்டுகள் பற்றியே கூறப்பட்டுள்ளன. அதேவேளையில் நீர்ப்பாசனத்துக்கு பாரிய கொண்டாற்றிய, இலங்கை மக்களால் மின்னேரியா தெய்வம் என அழைக்கப்பட்ட மகாசேனன் மகாஞான பௌத்தத்தை சேர்ந்தவனாதலால்; அவனது வரலாறு சில செய்யுட்களில் மட்டுமே சுருக்கமாக கூறப்பட்டுள்ளதை காணலாம். இவ்வாறு அக்காலத்தில் நிலவிய மதசார் நிலைகள் மகாவம்சத்தில் தாக்கம் செலுத்தியிருக்கின்றது.
இலங்கையின் மொழியியல் வரலாற்றில், மகாவம்சம் தோற்றம்பெற்ற காலமானது குறைவிருத்தியுடைய காலம் எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலப்பகுதியில் அதிகளவான பிராமிக் கல்வெட்டுக்கள் தோன்றவில்லை என்பதே அவ்வாறான குறிப்பிடலுக்கு காரணம். ஆனால் இக்காலப்பகுதியில் பிராமணிய மதத்தின் தேவ மொழியாகிய சமஸ்கிருதத்தின் செல்வாக்கு இலங்கையில் ஏற்படுவதைக் காணலாம். மகாஞான பௌத்த பிக்குகளைச் சார்ந்த அபயகிரி, ஜேகுவன விகாரைகள் சமஸ்கிருத மொழிக் கல்விக்கு புகழ்; பெற்றவர்களாக விளங்கினர். இக்காலத்தில் மகாவிகாரை பாளி மொழிமூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட சில மன்னர்கள் சமஸ்கிருதத்தினை ஆட்சி மொழியாகவும், விளம்பரங்களை மக்களுக்கு அறிவிக்கும் மொழியாகவும் பயன்படுத்தினர். உதாரணமாக மகாஞான கருத்துக்களை கூறும் குச்சவெளிக் கல்வெட்டு, திரியாய் கல்வெட்டு போன்றன சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. மேலும் அனுராதபுரத்திலுள்ள விஜயராம எனும் இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பஞ்சவிம்;சதிசஹஸ்திகா, பிரபஞ்சபாரமுதா போன்ற மகாஞான நூல்களில் உள்ள சமஸ்கிருத மொழிச் சுலோகங்களின் பகுதிகள் பொறிக்கப்பட்டள்ளன. இதே சமஸ்கிருத மொழியில் சாரார்த்த சங்கிரகம், ஜானகீ ஹரணம், ஜாதகமாலா போன்ற சமஸ்கிருத நூல்களும் எழுந்தன. இவ்வாறு தனித்த பண்பாட்டோடு விளங்கும் இலங்கைத் தீவில் சமஸ்கிருத மயமாக்களின் செல்வாக்;கை தடுக்கும் நோக்கில், பல்வேறு வழிகளில், பாமர மக்களிடையேயும், பிக்குகளிடயேயும் நிலவி வந்த சுதேச மரபுகளையும் தழுவி பாளி மொழியின் இலக்கண, இலக்கிய அமைதிக்கு ஏற்ப வரலாற்றையும், பௌத்த பண்பாட்டையும் வலியுறுத்தும் ஒரு “பெறுமதியான இலக்கியம்” எழவேண்டிய சூழ்நிலை நிலவியது. அதனை மகாநாமதேரர் நிறைவேற்றினார்.
இலங்கையில் மகாநாமதேரர் காலம் வரையிலும் ஒழுங்கான வகையில் வரலாற்றை கூறும் நூல்கள் எழுவில்லை. அட்டகதா மகாவம்சம், தீபவம்சம், போன்றவை குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே தருகின்றனவே தவிர, மகாவம்சத்தை போல் தொடர்ச்சியான, மன்னார் ஆட்சிக்காலம், ஆட்சிப்பரப்பு, தொண்டுகள், பொருளியல் பணி என்ற விடயங்களைத்தரவில்லை. இதனைத் தொடர்ந்த இலங்கையின் வரலாறு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் எழுதப்பட்டுள்ளன. இதற்கு அக்காலச் சூழல் எவ்வாறு உதவியதெனில்? மகாகாமதேரர் வாழ்ந்த சமகாலத்தில் உலகம் முழுவதும் தனித்த பண்பாடுகளுடன் கூடிய இனக்குழுமங்கள் உருவாகி வந்த காலம். உதாரணமாக தமிழகத்தில் பல்லவர்கள், ஐரோப்பாவில் தனித்தனி வம்சங்கள்;, வடஇந்தியாவில் குப்தர்கள் என நீள்கிறது. இவ்வாறான இனக்குழும பண்பாட்டு உருவாக்கச் சிந்தனை பண்டு தொட்டு ப+ர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் பல்லினங்கள் மத்தியில் பலமிக்க ஒரு குழுவிடம் உருவாவது வரலாற்று இயங்கியலின் போக்கு என்பார். இதனை உருவாக்கி கொள்ளவும், வரலாற்று இலக்கியத்தின் தேவை ஒன்று தேவைப்பட்ட காலமாகவும் இக்காலம் இருந்ததால், அதற்கேயுரிய பௌத்த தன்முனைப்பு பண்போடு மகாவம்சம் பாடப்பட்டது.
இலங்கை வரலாற்றில் கி.பி.6ம், 7ம் நூற்றாண்டுகள் சீரழிவுத் தொடக்கத்தினதும், வீழ்ச்சியின் தொடக்கத்தினதும் காலமாகும். வெளியகத் தமிழர் படையெடுப்புக்கள், உள்ளகத் தமிழ் படையெடுப்புக்கள், பௌத்த சங்கத்தின் பிளவு, சிங்கள அரசர்களிடம் உருவாகிவந்த அதிகாரப் போட்டிகள், நோய்கள் போன்றன அவ்வாறான ஒரு சூழலை உருவாக்கியது. இவ்வாறான சமூக இயங்கியல் தன்மையை மாற்ற வேண்டிய பொறுப்பு பௌத்த தேரர்களுக்கிருந்தது. அப்பணியை ஆற்றுவதில் இலக்கியங்கள் முதலிடம் வகிப்பதை வரலாற்றினூடாக அறியலாம். உதாரணமாக சங்க காலத்தை தொடர்ந்து வந்த தமிழக அரசியல் குழப்பநிலையை நீக்க, சிலப்பதிகாரம் எழுந்தது. மூவுடை வேந்தர்கள் முடியுடைக்குரியவர்களாக மாறியிருந்தனர். இந்நிலையை அவ் விலக்கியம் சரிவரப் புலப்படுத்தியிருந்தது. அதுபோல் மகாவம்சமும் தன்னினத்தின் கடந்த கால செழிப்புத்தன்மைகளையும், தன்னின தோற்றம் பற்றிய ஜதீகத்தையும், தாம் எதிர் கொள்ளும் தமிழர்களின் சவால்களையும், தாம் போற்றி வளர்க்க வேண்டிய பௌத்தம் பற்றியுமான செய்திகளை அதீத கற்பனாவுணர்வோடு படைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் அறிந்து செயலாற்றுபவர்களை காவியத் தலைவர்களாக காட்டியுள்ளது. எனவே நிகழ்கால சமூகத்தை மாற்றவேண்டிய பொறுப்பை மகாவம்சம் ஏற்றது எனலாம்.
இன்றை வரைக்கும் இலங்கை வரலாற்றை முதன்மைப்படுத்தும் ஒரு சான்றாக இருக்கும் மகாவம்சம் இவ்வாறுதான் காலத்தால் வன்முறையாகியது. பொய்களை நேர்த்தியாகக் கட்டமைப்பதனூடாக அதனை யுகங்களுக்கான வரலாறாக்கலாம் என்பதை இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த பௌத்த ஞானியொருவன் கண்டுபிடித்து, அறிவித்திருக்கிறான். உண்மைகள் காலத்தை சுடுவதால் பொய்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுவிடும் என்பதை உணர்ந்த அந்த ஞானி தொடக்க கால வரலாற்று வெளியில் நம்மை இல்லாமலே செய்துவிட்டான். நாம் இன்று வரை அனுபவிக்கும் அனைத்திற்கும் நம் மத்தியிலும் ஒரு மகாநாமன் தோன்றாமல் விட்டமைதான் பிரதான காரணம்.
“நீ செய்த செயல் தீய செயல் ஆகும்.
மரியாதைக்குரிய பிட்சுகளுடன்
சமரசம் செய்து கொள்: அவர்கள்
உண்மையான கோட்பாட்டில்
நம்பிக்கை கொண்டவர்கள்: அவர்கள்
பக்கமிருந்து கொண்டு உண்மையான
கொள்கையைக் காப்பற்று. அவ்வாறு
செய்தால், நீ ஆசிர்வதிக்கப்படுவாய்!”
மகாவம்சம், நாலவது அதிகாரம், 11வது செய்யுள்
அசோகனுக்கு வனதேவதை சொல்லியது.
து.ஜெயராஜா
No comments:
Post a Comment