அக்பரின் காலத்தில் தான் நேர்த்தியான நிர்வாக முறையொன்று அமைக்கப்பட்டது. பின்தோன்றல்கள் அதனை வைத்தே ஆட்சி நடத்தினர். இவரது நிர்வாக முறையில் மன்னர் அதிகளவான அதிகாரங்களையுடையவராயிருந்தார். அவரே எல்லா அதிகாரத்தின் பிறப்பிடமாய் விளங்கினார். திருக் குர்ஆனின் விதிப்படியே ஆட்சிமுறை அமைந்தது. உலோமாக்களுக்கு அரசரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஓரளவு இருப்பினும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. இருப்பினும் அக்பர் தனது கொள்கையின் படியே நிர்வாகம் நடத்தினார். சமயமும் அரசியலும் அரசரின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டுமென விரும்பினார். அதற்கு பின்வந்தவர்களும் குர்ஆனின் படியே நிர்வாகம் செய்தனர்.
அரசருக்கு அடுத்தபடியாக மன்னர்களுக்கு உதவிசெய்ய சில அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அக்பர் காலத்தில் ‘வக்கீல்’ என்பவரே முதலமைச்சராவார். வருவாய் துறை அமைச்சர் ‘வஸீர்’ அல்லது திவான் என்று அழைக்கப்பட்டார். வருவாயத்; துறையை கண்காணிப்பது தான்; முதலமைச்சரின் முக்கிய பணிகள். அரசர் திறமையற்றவாராக இருப்பின் இராணுவத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வஸீர் பெற்றிருந்தார். அரசாங்கத்தின் வரவு செலவு கவனிப்பதும் அவரது கடமை ஆகும். மிர்பக்~p என்றழைக்கப்பட்ட ஊதியத்துறை அமைச்சர் இருந்தார். எல்லா அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதும் இவரது பணியாகும். படைகளை போர்க்களத்திற்கு ஒழுங்குபடுத்துவதும் இவரது பணியாகும். பேரரசர் கொலுவிருப்பு நடத்தும் பொழுது மிர்பக்~p அவரிடமிருந்து வரும் மன்சாப்தர்களிடம் வரும் பரிந்துரைகளை பேரரசின் கவனத்திற்கு கொண்டு வருவார். அவர்களுக்கு முன் காலத்திலும், அவர் காலத்திலும் சரதர் என்றழைக்கப்பட்ட அதிகாரி பேரரசுக்குப் பின் நான்காவது நபராக செல்வாக்குப் பெற்றிருந்தார். அரசருக்கு சமயத்துறை சார்பாக ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பு இவருடையதாகும். அறநிலையங்களை கவனிப்பதும், குரானுக்கு எதிராக செயற்படும் மன்சப்தர்களுக்கு தண்டனை வழங்குவதும் இவரது பொறுப்பாயிருந்தது. ஆனால் அக்பர் சமயப்பற்று குறைவானவராக இருந்தபடியால் தனது காலத்தில் இப்பதவிக்குரிய அதிகாரத்தை படிப்படியாக குறைத்தார் எனப்படுகின்றது. அதற்குப் பதிலாக ஆறு மாநிலங்களுக்குமான சாதர்கனை நியமித்தார். இங்கு நீதி வழங்குவதற்காக ஒரு ஹாஜியை நியமித்தார். சிறை வழங்கும் கீழ்நிலை அதிகாரிகளிடையே ஊழல் ஏற்படா வண்ணம் கண்காணிக்க நியமிக்கப்பட்ட காலிகன் வேலியே பயிரை மேய்ந்தாற்போல் ஊழலின் விளைவிடமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
![]() |
ஹிமாயுன் தூபி |
அரசுக்கு வருமானம் தரும் துறைகளில் நிலவரி முதன்மையானதாகும். அக்பரின் காலத்தில் நிலவரி வருவாய் 363 கோடி தாம்கள் என அயினி அக்பாரி குறிப்பிடுகின்றது. அரசாங்க வருவாயின் பெரும்பகுதி இராணுவத்திற்கே செலவிடப்பட்டது. வருவாய் அதிகமுள்ள தொழில்கள் குறிப்பாக நீர்ச்சாயம் காய்ச்சுதல் போன்றவை, அரசாங்கத்தினாலேயே நடத்தப்பட்டன. போதை தரும் உற்பத்தி பொருட்களின் அளவை குறைக்கும் வகையில் அவற்றின் மீது அதிக வரி அறவிடப்பட்டன. ஆயினும் ஊழல் மலிந்திருந்தது.
மொகலாயப் பேரரசு அக்பரின் காலத்தில் பல சுபாக்களாகவும், சர்க்கார்களாகவும், பர்கானபாக்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சுபாக்களை மாநிலங்களாகவும், சார்க்கார்களை மாவட்டங்களாகவும் பர்கானாக்களை தாலுக்காக்களாகவும் கொள்ளலாம். 1579 – 80 களில் பேரரசு அல்ஹபாத், ஆக்ரா, அயுத், ஆஜ்மூர், ஹய்தரபாத், பீஹார், வங்கம், டெல்லி, காப+ல், லாஹீர், மூல்தான், மாளவர் ஆகிய பன்னிரண்டு சுபாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அப்பன்னிரண்டு சுபாக்களும் நூற்றுக்கு மேற்பட்ட சர்க்கார்களாகவும், ஒவ்வொரு சர்க்காரும் பல பர்கானாக்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. அக்பரின் காலத்தில் நிலம் சரிவர அளக்கப்பட்டு வரி அளவிடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. அவ்வகையில் நிலம் நான்கு வகையாக பிரிக்கப்பட்டிருந்தது. பருவம் தவறாமல் பயிரிடப்படும் நிலம் பெலாஜ் எனவும், தொடர்ந்து பயிரிட்டால் வளம் குறையுமென்பதால் சில பருவங்களுக்கு தரிசாக விடப்படும் நிலம் பரவுதி என்றும், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு தரிசாக விடப்படும் நிலம் சச்சார் எனவும், 5 ஆண்டுகட்கு மேலாக பயிரிடப்படாமல் இருக்கும் நிலம் பஞ்சார் என்றும் பெயர். விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தப்பட்டது. சில இடங்களில் ரயத்வரி கையாளப்பட்டது. இதனைவிட கால்நடைகளின் மீதும், மரங்களின் மீதும் விதிக்கப்பட்ட வரிகள், எண்ணெய், தோல், கம்பளி, சணல் முதலான பொருட்களுக்கான விற்பனை வரி முதலியனவும் அறவிடப்பட்டது. வரி வசூல் செய்வதில் பல அதிகாரிகள் ஈடுபட்டனர். கிராமங்களில் கார்கூன்கள் என்பவர்கள் இப்பணியை ஆற்றினர். அவர்களுக்கு அரசு தானியங்களை ஊதியமாக வழங்கியது. மக்களின் பழக்கவழக்கங்கள், நில அளவுகள் பற்றி அறிந்திருக்கும் அதிகாரி கனுக்கோ எனப்பட்டார். வருமான வரி நிர்வாகத்தில் சதர்கள், முன்சீப், சேக்தர், அமீன் முதலான அதிகாரிகள் கடமையாற்றினர். இதைவிட மாவட்ட அளவில் குறையினைப்பு அதிகாரிகளாகவும், நீதித்துறை அதிகாரிகளாகவும், அமல்குஸார், பிடிக்தி முதலானோர் செயற்பட்டனர். பிடிக்தி என்பவர் எழுத்தராகவும், ஆவணக்காப்பாளராகவும் இருந்தார். பொத்தாதார் என்பவர் பொருளாளராகவும், காப்பாளராகவும் இருந்தார்.
நிலவரியை விட மொகலாய பேரரசுக்கு சுங்கவரியும் இன்னும் கணிசமான வருவாயைக் கொடுத்தன. பேரரசின் துறைமுகங்களில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இயங்கினார். இவர்கள் ~hந்தர் எனப்பட்டனர். ஆனால் அக்பர் தொட்டு ஏனைய மன்னர்கள் அதிகளவான வரிகளை படிப்படியாக குறைத்தார்கள் எனப்படுகின்றது. மொகலாயர் காலத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு பண அலகுகள் புழக்கத்திலிருந்தன. அல்ரா, தர்தம் போன்ற நாணயங்கள், பொன், வெள்ளி, பித்தளை முதலிய உலோகங்களில் நாணயங்கள் அச்சிடப்பட்டன.
![]() |
அவுரங்சீப் |
மொகலாயர் கிராமங்களின் காவல் நிர்வாகம் பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. காரணம் காலம் காலமாக இருந்து வந்த பஞ்சாயத்தாரின் காவலே போதுமானதாக இருந்தது. கிராமத்தலைவனே அதற்கு பொறுப்பானவன். கிராமத்தில் நிகழும் களவு, கொள்ளை போன்றவற்றுக்கு கிராமத்தவர்களே பொறுப்பானவர்களாக இருந்தனர். கிராமத்தில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பௌஜ்தாருடையது. வரிப்பணத்தை ஒழுங்காக பெறுவதும் இவரது பணியாக இருந்தது.
![]() |
பாபரின் நாணயங்கள் |
பெரிய நகரங்களில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது கொத்தவலின் கடமையாகும். இவரது கடமைகள் மௌரியர்கால நகரகா என்பவரது பணியை ஒத்திருந்தது. இவர் நகரிலுள்ள தெருக்களையும், வீடுகளையும் பற்றிய புள்ளி விவரங்களை வைத்திருந்தார். அவரின் மேற்பார்வையில் சிறு ஒற்றர் படையிருந்தது. திருடர்களைப் பிடித்து அவர்களிடம் பறிபோன பொருட்களை மீளப்பெறுவதும் இவரது கடமையாகும். இத்துடன் இன்னும் அதிக பொறுப்புக்கள் இவரிடமிருந்தன.
மொகலாய கால காவல்துறையினரால் திருட்டு மற்றும் ஏனைய குற்றங்களுக்கு கடுந்தண்டனைகள் வழங்கப்பட்ட போதும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1609 ஆம்; ஆண்டு காலத்திலிருந்து ஆக்ரா பயணித்த வில்லியம் பிஞ்க் வழியெங்கும் திருடர் பயமிருந்ததாக குறிப்பிடுகின்றார்.
பேரரசானது மாநிலம், மாவட்டம், கிராமம் என வகுக்கப்பட்டு, மன்னரை அதிபதியாக கொண்டு, ஏனைய அமைச்சர்கள் அதிகாரிகள் போன்றோர்களால் நிர்வகிக்கப்பட்டது.
மொகலாய கால நிர்வாக முறையானது, தமது ஆட்சி நலன்களுக்கு தீங்கு ஏற்படாதவாறு, ஏற்கனவே இருந்த நடைமுறைகளுக்கு இஸ்லாமிய சாயமிடலுடன் பேணிக்கொண்ட முறையைக் காணலாம். ஆட்சி முறையானது குர் ஆனைத் தலைமையாகக் கொண்டு அமைக்கப்பட்டாலும், அக்பர் காலத்தில் சில இலகுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டது. இந் நிர்வாக நடைமுறைகள் இற்றைவரை சில நிர்வாக பண்பாட்டுக் கூறுகளுடன் கலந்திருப்பதை காணலாம்.
து.ஜெயராஜா
No comments:
Post a Comment