இலங்கையில் 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் ஆதி மனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று பாஹியங்கல குகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல்லியல்துறை கூறுகிறது.இலங்கையின் கலுத்துறை மாவட்டத்திலே பாஹியங்கல என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுவரும் குகையில் இருந்து இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியில்துறை தெரிவிக்கிறது.
Tuesday, June 19, 2012
கொழும்பு நூதனசாலையினுள் என்ன இருக்கின்றது?
கொழும்பு நூதனசாலையானது அன்னியர் ஆட்சிக்கால கட்டத்தில் அதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி ஸ்ரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த நூதனசாலை 1942 ஆம் ஆண்டு பி.சி.பி. திறனியகலை என்பவரின் முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் தேசிய அந்தஸ்துப்பெற்ற ஓர் உயரிய கலைக்கூடகமாக விளங்க வித்திடப்பட்டது.
யாழப்பாணத்தில் சோழர் காலத்து சிவன் கோயில்
யாழ்ப்பாணம் பற்றிய தமிழ் - சிங்கள வரலாற்று இலக்கியங்களில் எடுத்து உரைக்கப்படும் மிக முக்கியமான இடங்களில் சவகிரி என்னும் இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்று விளங்குவது சிறப்பாக நோக்கத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் சவகிரி என்னும் இடம் தற்கால சாவகச்சேரி பிரதேசத்தைக் குறிப்பதாகக் கருத முடியும். அந்த வகையில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள மட்டுவில் கிராமம் வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடமாக நோக்கக் கூடியவாறு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Thursday, June 14, 2012
புறநானூறு தரும் தமிழர் வரலாறு
சங்க காலம் என்பது கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதியாகும். இக்காலத்தில் தோன்றிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திரு முருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பதினெட்டு நூல்களும் சங்க இலக்கிய நூல்களாகும்.
Wednesday, June 13, 2012
தமிழர் நாகரிகத்தின் தொன்மை

சங்க காலமும் தொல்லியலும்.
தொல்லியலை Archaeology எனக்கூறுவர். 'ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்' என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.
Subscribe to:
Posts (Atom)