உலகில் ஆச்சரியமிக்க வரலாற்றுப் பக்கங்களைக் கொண்ட நாடுகளுல் இந்தியாவும் ஒன்று. இங்கு நிலவிய தொன்மைப் பண்பாடுகள் ஆபிரிக்காவையும் மிஞ்சி நிற்கின்றன. அதற்கான ஆதாரங்கள் அழிவடைந்த நிலையில் இந்தியா முழுதும் பரவலாகக் கிடைக்கின்றன. அதில் பீ.பீ.சி தொகுத்திருக்கும் இந்தியாவின் கதை சுவாரஸ்யமிக்கது. பல புதிய தகவல்களை இந்தியாவின் வரலாறு குறித்து தருகின்றது
Wednesday, November 21, 2012
Saturday, October 20, 2012
கிளிநொச்சியில் தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
இலங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத் திட்டத்தில் உள்ள காணி 1990 ஆம் ஆண்டளவில் பயிர்ச் செய்கைக்காகத் திருத்தப்பட்டபோது, எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும், தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன.
Tuesday, June 19, 2012
12 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட மனிதஎலும்புக் கூடுகள் இலங்கையில் கண்டெடுப்பு
இலங்கையில் 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் ஆதி மனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று பாஹியங்கல குகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல்லியல்துறை கூறுகிறது.இலங்கையின் கலுத்துறை மாவட்டத்திலே பாஹியங்கல என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுவரும் குகையில் இருந்து இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியில்துறை தெரிவிக்கிறது.
கொழும்பு நூதனசாலையினுள் என்ன இருக்கின்றது?
கொழும்பு நூதனசாலையானது அன்னியர் ஆட்சிக்கால கட்டத்தில் அதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி ஸ்ரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த நூதனசாலை 1942 ஆம் ஆண்டு பி.சி.பி. திறனியகலை என்பவரின் முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் தேசிய அந்தஸ்துப்பெற்ற ஓர் உயரிய கலைக்கூடகமாக விளங்க வித்திடப்பட்டது.
யாழப்பாணத்தில் சோழர் காலத்து சிவன் கோயில்
யாழ்ப்பாணம் பற்றிய தமிழ் - சிங்கள வரலாற்று இலக்கியங்களில் எடுத்து உரைக்கப்படும் மிக முக்கியமான இடங்களில் சவகிரி என்னும் இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்று விளங்குவது சிறப்பாக நோக்கத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் சவகிரி என்னும் இடம் தற்கால சாவகச்சேரி பிரதேசத்தைக் குறிப்பதாகக் கருத முடியும். அந்த வகையில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள மட்டுவில் கிராமம் வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடமாக நோக்கக் கூடியவாறு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Thursday, June 14, 2012
புறநானூறு தரும் தமிழர் வரலாறு
சங்க காலம் என்பது கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதியாகும். இக்காலத்தில் தோன்றிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திரு முருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பதினெட்டு நூல்களும் சங்க இலக்கிய நூல்களாகும்.
Wednesday, June 13, 2012
தமிழர் நாகரிகத்தின் தொன்மை

சங்க காலமும் தொல்லியலும்.
தொல்லியலை Archaeology எனக்கூறுவர். 'ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்' என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.
Thursday, March 22, 2012
மொகலாயப் பேரரசின் நிர்வாகம்
Saturday, March 10, 2012
Tuesday, February 21, 2012
Sunday, February 19, 2012
தமிழர் கட்டடக் கலை வரலாற்றில் பல்லவர் காலம்
![]() |
மகாவலிபுரம் |
தமிழர் நாகரிக தொடக்கத்தை சங்க இலக்கியங்களிலிருந்து புதுக்கித் தரும் தொல்லியல் ஆய்வுகள்
து.ஜெயராஜா
கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலவிய பண்பாட்டுக் காலத்தை சங்ககாலம் என்பர். இக்காலம் தமிழ் பண்பாட்டுருவாக்கத்தில் மிக முக்கியமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும் தமிழ் பண்பாட்டின் தொன்மை பற்றி ஆராய முற்படும் ஒருவர் அதன் தொடக்கப் புள்ளியாக சங்க இலக்கியத்தை இன்றும் எடுத்துக் கொள்கின்றனர். பெருங்கற்கால முதிர்ச்சி நிலையில் உருவான இச்சங்க காலமானது தமிழ் பண்பாட்டு வாழ்வுப்புலத்தை அகம், புறம் எனப்பிரித்து அடையாளப்படுத்தியது. அதுவே பழந்தமிழ் இலக்கியங்களாக கருதப்படும் சங்க இலக்கியங்களின் பாகு பொருளாகவும் இருந்துள்ளது. இலக்கியங்கள் காலத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குவதனால் தமிழரது பண்பாட்டையும் படம்பிடித்து காட்டியிருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ் பண்பாடு பற்றிய ஆய்வில் சங்க இலக்கியங்கள் முக்கியத்துவப் படுத்தப்படுகின்றன.
பொலநறுவை காலம்- வரலாற்றில் பன்மைத்தனத்தின் அடையாளம்
து.ஜெயராஜா
ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழ்ந்து தமது பண்பாடுகளை சுதந்திரமாய் பேணுவதும், சுதந்திரமான அரசியல்; தெரிவுகளில் ஈடுபடுவதும் பல்லினப்பண்பாட்டை அடையாளப்படுத்தும் விழுமியங்கள். இவ்விடயங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒரு நாட்டில் நிலவுமாயின் அந்நாடு பல்லினப்பண்பாடு கொண்ட நாடு என நோக்கப்படுகின்றது. இலங்கையில் இன்று பல இனங்கள் வாழுகின்ற போதிலும் அது பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய பல்லினப்பண்பாட்டை இன்னமும் நெருங்கவில்லை. ஆனால் மிக நீண்டகாலமாக இந்நாட்டில் பல இன, மத, மொழி, கலாச்சார அம்சங்களைப் பேணுகின்ற மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றுகளுண்டு. இலங்கை அரசாங்க அருங்காட்சியகம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆவணத்தில் இலங்கை தமிழ், சிங்கள, பறங்கி, முஸ்லிம், செட்டி, மலாய இனங்கள் என பல இனங்களைக்; கொண்ட நாடு என குறிப்பிட்டமையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே இந்நாடு பல இனங்களைக் கொண்ட நாடு என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதனை பேராசிரியர் சுதர்சன் செனவிரட்ண புராதன இலங்கையில் கூட குறிப்பிட்ட மதம், இனம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்கிறார். அக்கால மக்களது பண்பாட்டு உருவாக்கமானது பல்வேறு நாடுகளுடன்; கொண்டிருந்த உறவினால் ஏற்பட்ட தென்பது அவரின் கருத்தாகும். இலங்கையானது நீண்டகாலமாக பல்லினப்பண்பாடு கொண்டதாய் இருந்து வந்துள்ளமையை சரியாக வெளிப்படுத்தும் காலமாகப் பொலநறுவை விளங்குகின்றது. இதனை நிரூபிப்பதற்கு பல்வேறு இலக்கிய தொல்லியல் சான்றுகளுண்டு.
கி.பி.993 தொடக்கம் கி.பி.1215ஆம் ஆண்டுவரை இலங்கையில் நிலவிய சோழர்காலமானது பல விளைவுகளை ஏற்படுத்தியது. அவை பண்பாட்டு ரீதியிலானவையாக அமைந்துள்ளது. பெரும்பாலும் சிங்களப்; பண்பாட்டில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணியது. ஆயினும் சிங்கள தமிழ் மக்கள் ஒன்றிணைந்து உயர்ந்த நாகரீகம் உருவாக உழைத்தனர். இரு இனங்களுமே தத்தம் பண்பாட்டு வரை பாடுபட்டனர். சுதந்திரமான முறையில் அதனை நடைமுறைப்படுத்தினர். சோழர்கள் வணிக நோக்கிலான படையெடுப்பை மேற்கொண்டிருந்தால் இங்கு வாழ்கின்ற மக்களது ஆதரவைப் பெற்றே ஆட்சி நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. வட இந்தியாவில் அழிக்கப்பட்ட இந்துக்கோயில் செல்வங்களை கொண்டு வந்து தமிழகத்தில் இந்துப்பண்பாடு வளர்த்தனர். ஆனால் கடல் கடந்த நாடுகளில் தாம் கைப்பற்றுகின்ற நாட்டு மக்களது பண்பாடு வரைவும் உழைத்தனர். இலங்கையில் சோழர் காலத்தில் பௌத்தமதத்திற்காக பெரும்பள்ளி அமைக்கப்பட்டது. அத்தோடு சைவமும் தமிழும் மிக உன்னத நிலையை அடைந்தன.
சோழர்களை இலங்கையிலிருந்து அகற்றிய 1ஆம் விஜயபாகு இந்நாட்டின் இனவிடுதலை வீரனாக அவனை காவிய நாயகனாக வைத்துப்பாடப்பட்ட சூளவம்சம் கூறுகின்றது. ஆனால் விஜயன் மேற்கொண்டது இனவிடுதலைப் போராட்டமல்ல. சோழர்கள் வணிக ரீதியிலான படையெடுப்பை மேற்கொண்டிருந்தனர். அதனை முறியடிக்க இலங்கையில் வாழ்ந்த தமிழ், சிங்கள மக்களோடு இணைந்த வகையிலேயே விஜயபாகுவினால் படையெடுக்க முடிந்தது. உதாரணமாக தென்னிலங்கையிலிருந்து 1055ஆம் ஆண்டு விஜயபாகு சோழருக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பில் தமிழ் தளபதிகளும், தமிழ் படைகளும், படைக்குழுமங்களும் இருந்தள்ளதைக் குறிப்பிடலாம். 1067ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சோழக்கல் வெட்டொன்று விஜயபாகுவின்; படைத்தளபதி குருகுலத்தரையனை கொன்றதாகக் குறிப்பிடுகின்றது. சூளவம்சம் விஜயபாகுவின் படையில் இருந்த தமிழ் தளபதிகளான சள மற்றும் ரவிதேவ போன்றோர் சோழப்படையில் இணைந்ததாகக் கூறுகின்றது. சோழர் தென்னிலங்கை நோக்கி படையெடுக்கையில் அங்கு இரு பாண்டிய இளவரசர்களும், ஒரு வட இந்திய இளவரசனும் இருந்ததாகக் கூறுகின்றது. எனவே இதனை ஒரு இன விடுதலைப் போராட்;டமாக குறிப்பிட முடியாது. அங்கு பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அரசியல், படையியல், கலாசார நடவடிக்கையில் சம அந்தஸ்துடன் பங்கெடுத்துள்ளனர்.
இது விஜயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து அகற்றிய பின்னரும் வெளிப்பட்டிருக்கின்றது. பொலநறுவை வெற்றியின் முன் சிங்கள்படை வீரர்களே கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தமிழகம் சென்று படையுதவி பெற்று வந்துள்ளனர்.
அடுத்து பொலநறுவையில் நிலவிய பல்லினப் பண்பாட்டின் உச்சமாக விளங்குவது திருமணத் தொடர்புகளாகும். அதாவது விஜயபாகு அரசியல் நலன்களோடு பேணிய திருமணத் தொடர்பு இதனை வெளிக்காட்டி நிற்கின்றது. விஜயபாகு யாரை எதிரியாக கொண்டானோ அந்த குலோத்துங்க சோழனின் மகள் சுந்தரவல்லியை தன் சகோதரி மகன் வீரபாகுவிற்கு திருமணம் செய்து வைத்தான். விஜயபாகு தன் சகோதரி மித்திராவை பாண்டிய இளவரசனுக்கு மணம் முடித்து வைத்தான். அப்பாண்டிய இளவரசனின் மகளின் மகனே 1ஆம் பராக்கிரமபாகு. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட திருமணத் தொடர்புகள் இருந்த உறவு அடிப்படையில் கூட பொலநறுவையில் பல்லினப் பண்பாடு மேன்மை பெற்றதைக் காட்டுகின்றது.
அடுத்து பல்லின பண்பாட்டை சரியாக வெளிப்படுத்தும் மத நடவடிக்கைகளைப் பேணியதிலும் பொலநறுவை பல்லினப் பண்பாட்டைப் பேணியதில் உச்சம் பெற்றுள்ளது. சோழர் ஆட்சிக்காலத்தில் இந்துமதம் மேலோங்கியது. இதற்கு சோழர் காலம் பொலநறுவையில் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களும், பிராமணக் குடியேற்றங்களும், இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிய குறிப்புக்களும் சான்றாகும். ஆனால் பௌத்தமதம் செல்வாக்கிழந்தது. ஆயினும் சோழர் பௌத்தத்தை அழித்தனர் என குறிப்பிட முடியாது. பௌத்த மதத்திற்காக திருகோணமலையில் பெரும் பள்ளியை அமைத்தனர். இது வணிகநோக்கில் அமைக்கப்பட்டதாகும்.
சோழர்களை அடுத்து வந்த விஜயபாகு பௌத்த மதத்தை மேன்மையடையச் செய்தான். ஆனால் சைவத்தையும் ஆதரித்தான். விஜயபாகு அவைக்களத்தில் பிராமணியர் ஆதிக்கம் ஏற்பட்டிருந்தது. விஜயராஜேஸ்வரம், ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம் போன்ற சைவ மரபுகளை வளர்க்கும் மையங்களை அமைத்தான். பிராமணிய செல்வாக்கு அரச சபையிலும், விழாக்களிலும் முன்னிலை பெற்றது. இதற்கு பொலநறுவை கால அரசர் பௌத்தர்கள் அல்லாத பிராமண குடும்பங்களில் திருமண உறவுகளை ஏற்படுத்தியமை சான்றாகும். விஜயபாகு அயோத்தி இளவரசி லீலாவதி கலிங்க இளவரசி திரிலோக சுந்தரி போன்றோரை திருமணம் செய்தமையைக் குறிப்பிடலாம். திரிலோக சுந்தரி பௌத்தத்திற்கு மாறாக நடந்தாள் எனப்பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. திரிலோக சுந்தரியின் மகன் விக்கிரமபாகு பௌத்தர் அல்லாத பிராமணப் பெண்ணை மணந்ததால் பிராமணியம் அரச சபையில் செல்வாக்குப் பெற்றது. இவளுக்கு மகனாகப் பிறந்த கஜபாகு ஒரு சைவனாகவே ஆட்சி நடத்தினார். கஜபாகு பிற்கால ஆட்சியில் கோணேஸ்வரம், கந்தளாய், சதுர்வேதி மங்களத்தில் கழித்தான். என்பதற்குப் பல ஆதாரங்களுண்டு. எனவே பொலநறுவைக்காலத்தில் மத அடிப்படையில் பல்லினப் பண்பாடு நிலவியுள்ளது.
பொலநறுவையைச் சூழ தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்தமையால் நிர்வாக நடவடிக்கைகளிலும் பல்லினத் தன்மையை பேண வேண்டிய கட்டாயம் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. கல்வெட்டுக்களும், அரச ஆணைகளும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. முதன்முதலாக சிங்கள மொழியுடன் தமிழும் நிர்வாக மொழியாகிறது. விஜயபாகு, பராக்கிரமபாகு, கஜபாகு போன்றோர் தமிழ் மொழியிலேயே கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளனர். இக்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ்லிகிதா நூல் தமிழர் பொலநறுவை நிர்வாகத்தில் இடம் பெற்றிருந்தமைக்கு சான்றாகின்றது.
படைக் கட்டமைப்பிலும் பல்லினத் தன்மை பேணப்பட்டமைக்கு பல சான்றுகள் உண்டு. விஜயபாகு பெருமளவில் தமிழ்ப் படைகளிடையே தங்கியிருந்தான். இக்காலத்தில் வேலைக்காரர், அகப்படியார், வீரக் கொடியார் முதலான படைகள் இங்கு பணியில் அமர்த்திப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்த படையணிகளாகும். அத்தோடு பொலநறுவைக்கால மன்னர்கள் மேற்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் படையெடுப்புக்களுக்கு இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் தமி; அதிகாரிகளின் கீழ் இயங்கினர். விஜயபாகு, வேளைக்காரப் படையில் தங்கியிருந்தான். பொலநறுவைக்கால தந்த தாதுவின் பாதுகாப்புப் பணிகள் இப்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கஜபாகு, பராக்கிரமபாகு, நிசங்க மல்லன் காலத்திலும் இப்படைப்பிரிவுகள் இருந்தன. பராக்கிரமபாகுவின் பர்மியப்படையெடுப்பு தமிழ்த் தளபதி ஆதித்தன் தலைமையில்; நடைபெற்றது. நிசங்கமல்லனின் படையில் சிங்களப்படை வீரர்களுடன் தமிழ்ப்படை வீரர்களும் இருந்தனர்.
அடுத்து தமிழ் இனத்தின் முக்கிய மதமான சைவமும், சிங்கள இனத்தின் முக்கிய மதமான பௌத்தமும் பரஸ்பர நல்லுறவை பேணிய வகையில் பல்லினத்தன்மையைப் பேணியுள்ளன. கி.பி. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு வரையான ஆட்சிக்காலம் பொலநறுவையில் மதவேறுபாட்டை ஏற்படுத்தினாலும் சோழர் ஆட்சியை தொடர்ந்து ஒற்றுமை நிலவியது. சோழர் ஆட்சியில் தமிழகத்ததில் சைவம் முன்னிலை பெற்றிருந்தாலும் பௌத்தம் அறியவில்லை. நாகபட்டணம், இலங்கை போன்றன இக்காலத்தில் பௌத்த பரிமாற்ற மையமாக தொழிற்பட்டது. இக்காலத்தில் இலங்கையிலிருந்த பௌத்த துறவி ஆனந்த வனரத என்பவரிடம் தமிழ் பௌத்த துறவி தீபங்கரர் கல்வி கற்றார். இவரைப் போல காசியப்பர், புத்தமித்திரர், ஆனந்தர், அனுருத்தர் பற்றிய குறிப்புண்டு. அமரதாஸ லியனகே தனது நூலில் தமிழ் பௌத்தர்கள் மதிக்கப்பட்டதையும், தம்பதேனிய தலை நகராக்கப்பட்டபோது பௌத்த சங்கம் சீர்குலையாது இருந்தமைக்கும் தமிழ் நாட்டு பௌத்த துறவிகளின் பங்களிப்பே பிரதான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே மத கொடுக்கல் வாங்கல் என்ற ரீதியிலும் பொலநறுவைக் காலமானது பல்லினத்; தன்மையைப் பேணியுள்ளது.
பொலநறுவைக்கால நாகரீக வளாச்சியில் அக்காலம் உன்னத வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு அங்கு இன்னும் இருக்கும் கட்டட. சிற்பங்களே சான்றாகும். இங்கு காணப்படும் கட்டடங்களும். சிறபங்களும் தமிழ் சிங்கள மக்களின் கூட்டு முயற்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டென கூறப்படுகின்றது. இங்குள்ள பௌத்த இந்து கோவில்கள், அரசவைக் கட்டடங்கள் முன்னைய சிங்கள கலைமரபையும், சமகால தென்னிந்திய கலை மரபையும் பிரதிபலிக்கின்றன. தமிழ்ச் சிற்பிகள் இதில் சிங்கள சிற்பிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்பதற்கு சமகால பாளி இலக்கியங்கள் சான்றாகும். கட்டடங்களில் எழுதப்பட்ட குறிப்புக்களில்; தமிழ் பங்கெடுத்ததைக் காட்டுவதாக பேராசிரியர் பரண விதான கூறுகின்றார். பேராசிரியர் பண்டார நாயக்க வெளித்தோற்றத்தில் சிங்கள கலைமரபு காணப்பட்டாலும் அதில் பெருமளவு தென்னிந்தியகலை மரபின் தாக்கம் இருப்பதாக கூறுகின்றார். பொலநறுவையில் உள்ள பௌத்த தூபி தமிழர் தூபம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு அந்த கட்டட சிற்பிகளே முழுமுதற்காரணம்.
தொடர்ந்து வந்த காலத்திலும் பல்லின பண்பாடு மிக உன்னத நிலையடைந்திருந்தமைக்கு அங்கு இன்றும் நின்று நிலைக்கும் பௌத்த, இந்து கட்டட எச்சங்கள் சான்றாகும். இனங்களுக்கிடையே நல்லுறவு இல்லாமல், ஆக்கிரமிப்பு மனோபாவம் மேலோங்கியிருந்தால் அவை மாறி மாறி எழுச்சி பெற்ற இனங்கங்கனால் அழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு செய்யப்படாமல் இன்று வரை நின்று நிலைக்க பொலநறுவை காலத்தில் நிலவிய பல்லினத் தன்மையே காரணம்.
பொலநறுவைக்கால மக்களும், மன்னர்களும் பேணிய பல்லினப் பண்பாடானது அந்நாகரீகம் சிறப்புப் பெற காரணமாக அமைந்து விட்டது. ஆனால் தொடர்ந்து வந்த இலங்கையின் வரலாற்று யுகங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இலங்கையஜல் இரண்டாக பிளவுண்ட இனவுறவு உணர்வுமயப்பட்ட நிpலையில் அழிக்க முடியா குரோதமாக வளர்ந்தது. ஆங்கிலேய படர்ச்சி முடிவில் அது மேலும் விரிவடைந்து கசப்பான இணன்றைய நிலையை உருவாக்கிவிட்டது.
பல்லினப் பண்பாடு- சாத்தியமாக தருணங்கள்
து.ஜெயராஜா
![]() |
இலங்கையில் சாத்தியமான தருணமொன்று |
உலகம் கிராமமாகிய சூழலில் பண்பாடுகளும், பண்பாடு பற்றிய சித்தாந்தங்களும் மாற்றுவடிவம் பெற்று வருகின்றன. அனைத்தையும் வணிகம் நோக்கிய பாதையில் இழுத்துப் போகும் புதிய உலக ஒழுங்கானது, தனித்துவமானதாக இருந்த பண்பாட்டையும் தன்வழிக்கு கெண்டுவந்து விட்டது. ஒவ்வொரு முடுக்கிலும் வாழுகின்ற பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களை பேதமற்று உள்ளீர்த்துக் கொள்கின்றது. இன்றைய உலகமயச் சூழல் எதற்கும் எல்லைகள் கிடையாது. அனைத்தும் முதலாளித்துவ சிந்தனை வட்டத்துக்குட்பட்டே ஜீவிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழுகின்றன. தம் எல்லைகளைத் தகர்த்; தெறிகின்றன. அடிமைப்படுத்தலின் அல்லது நவகாலனித்துவப்படுத்தலின் வடிவமாய் பரப்பப்படும் நுகர்வுக் கலாச்சாரம் வணிக நோக்கிலான கலாசார கூறுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன. அது மேலும் மேலும் நாடுகளெங்கும் விரிவடைந்து முதலாளித்துவ கால்கள் வலுப்பெறுவதற்கு சமச்சிந்தனையும், சமப் பண்பாடும் உடைய மக்கள் தேவைப்படுகின்றனர். இது முக்கியமாய் உணரப்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில், முன்வைக்கப்பட்டதே “பல்லினப்பண்பாடு” ஜஆரடவi ஊரடவரசநஸ எனும் கருத்துருவம் ஆகும். 19ஆம் நூற்றாண்டில் இப்பண்பாடானது மேற்கத்தேய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டன. சில நாடகள் வணிக ரீதியான வெற்றியை இதில் கண்டன.
இவ்வகையில் ஆரம்பமாகிய பல்லினப் பண்பாட்டிற்கு காலத்திற்கு காலம் வரைவிலக்கணப்படுத்தல்கள் இடம் பெற்று வந்துள்ளன. ஆரம்பத்தில் ஒரு நாட்டில் அல்லது வட்டாரத்தில் பல இன, மொழி, மத வேறுபாடு கொண்ட மக்கள் கூட்டாக வாழ்தலை பல்லினப் பண்பாடு என வரைவுபடுத்தினர். ஆனால் இன்றைய நிலையில் இக்கருத்து மேலும் செழுமை பெற்று, குறிப்பிட்ட பிராந்தியத்தில் பன்மைப் பண்பாடுகளைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்வதோடு. அவர்களிடையே அரசியல், சமூக, சமய, பொருளாதார ரீதியில் பரஸ்பர புரிந்துணர்வு பேணப்படுதலே சரியான பல்லினப்பண்பாடாக அடையாளம் காணப்படுகின்றது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனங்களின் வாழ்வு நிலமைகளை நிராகரிப்பதையும், அவர்தம் பண்பாட்டு பேணலுக்கு அனமதி மறுப்பதையும் சரியான பல்லின பண்பாடாக ஏற்கமுடியாது எனவும் கூறப்படுகின்றது.
![]() |
கொடிகளில் பறக்கும் பன்மைத்துவம். |
இவ்வாறு அறிவியல் ரீதியான கோட்பாட்டாக்கத்தைப் பெற்றுவிட்ட பல்லினப் பண்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் இன்று நெற்று உருவானதல்ல. 18 ஆம் நூற்றாண்டில் அதற்கு ஒரு அறிவார்ந்த தளம் கிடைத்ததே தவிர அந்நூறாண்டில் உருவாக்கவில்லை. மனித பரிணாமத்தில் நாகரீக நிலையை அடையும் போதே பல்லின பண்பாடு முகிழ்ப்புப்; பெற்று விட்டதாக எண்ணப்படுகின்றது. பண்டைய காலத்தில் ஆறு, மலை, குகை, மேட்டுப் பகுதிகள் போன்ற இயற்கை எல்லைகளுக்குள் மனிதக் கூட்டம் தம்மை வரையறுத்துக் கௌ;ள வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இனக்குழுமங்களுக்கிடையே தொடர்புகள் அரிதாகவே காணப்பட்டது. இனக்குழும வாழ்வு எழுத்தின் அறிமுகம், நகர உருவாக்கம். அரச உருவாக்கம், விவசாய பொருளாதார அறிமுகம் போன்றவற்றின் வருகையோடு நாகரீக நிலையை அடைந்தது. இந்நாகரீகங்கள் ஒவ்வொன்றும் கொண்டிருந்த தொடர்புகள் பல்வேறு பண்பாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு வழிசமைத்தது. உதாரணமாக சிந்துவெளி, தமாசப்பத்தேமிய, சுமேதிய, எகிப்திய, கிரேக்க நாகரீகங்கள் தமக்கிடையே பரிமாறிக் கொண்ட பண்பாட்டம்சங்களைக் குறிப்பிடலாம். நாகரீகங்களின் அஸ்தமிப்போடு உருவான வரலாற்றுக் காலமும், பேரரச உருவாக்கங்களும் அடிமைப்படுத்தல்களைத் தீவிரப்படுத்தியது. நாடு விட்டு நாடாக பெரும் படைகளோடு பரந்த படையெடுப்புக்கள், பண்பாட்டு நிர்மூலமாக்கல்களுக்கு வழிசமைத்தது. ஒன்றையழித்து அதன் எச்சங்களைக் கொண்டு இன்னொன்று கட்டியெழுப்பப்பட்டது. புதிதாய் அறிமுகமாகும் ஒவ்வொரு பண்பாட்டிலும் பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் கலந்திருந்தன. பல்லினப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் 16ஆம் நூற்றாண்டு வரை இந் நிலமையே நீடித்தது. இந்நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான மறுமலர்ச்சி, கைத் தொழில் புரட்சி, பிரான்சிய புரட்சி, நாடுகாண் பயணங்கள், போக்குவரத்து விருத்தி போன்றன அனைத்து இனங்களையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. விருத்தியடைந்த மேற்கத்தேயர்கள் பல விருத்தி குறைந்த தேசங்களையும், இனங்களையும் கண்டுபிடித்து, படையியல் ரீதியாக கைப்பற்றிக் கொண்டனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் இப்பின்னணியில் தமது பண்பாடுகளை உலகம் முழுவதும் பரப்பினர். அதுவும் ஒரு காலனித்துவ ரீதியிலானதாகவே அமைந்தது. இக்காலகட்டத்திற்கு முடிவுகட்ட உருவான பிரான்சிய புரட்சியானது உலகம் முழுவதும் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற சிந்தனைகளை ஏற்படுத்தியது. அவர்கள் முன்னெடுத்த விடுதலைப்போராட்டம் சுதேச இன அடையாளப்படுத்தல்களுக்கான தேடலைத் தொடக்கிவைத்தது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் பல இனங்களை அத்தேடல் கண்டடைந்தது. இதுவே தேசியவாதம் எனப்படுகின்றது. தேசியவாதத்தின் முதிர்ச்சியில் உருவான உலகமயமாதல் முதலாளித்துவத்தை விஸ்தீரணப்படுத்தியது. கம்ய+னிசத்தின் சரணடைதலோடு பெருவிருட்சமாகிய முதலாளித்துவம் உலகை கிராமமாக்கி நுகர்வு கலாச்சாரம் கொண்ட இனங்களை உருவாக்க கருமமாற்றியது. அதற்காக உருவாக்கப்பட்ட பண்பாட்டு போட்பாட்டாக்கமே பல்லினப்பண்பாடு. இதனை நடைமுறைப்படுத்துவதில் மேற்கற்தேய நாடுகள் முன்நின்றாலும் பல குறை நிறைகளை கொண்டு காணப்படுகின்றது.
உலக மக்கள் அனைவரும் தம் சக மனிதரை, அவரது பண்பாட்டம்சங்களை ஏற்று மதித்து நடக்க வைத்தமை பல்லினப்பண்பாட்டின் ஒரு நிறைவான அம்சமாகும். கடந்த நூற்றாண்டுகளில் மிக மோசமான அடக்கு முறைக்குள்ளும், அடிமைப் படுத்தல்களுக்குள்ளும் வாழந்த கறுப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்களால் சமநிலையில் வைத்து நோக்கப்படுகின்றனர். அவர்தம் மதத்தையும், கலைப்பாரம் பரியங்களையும் அவர்கள் வாழும் இடங்களிளெல்லாம் பேணிக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியுள்ளது. அரசியல் ரீதியாக சமத்துவ நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. உதாரணமாக கறுப்பினத்தவர்களை மிக மோசமாக அடக்கிய அமெரிக்கர்களுக்கே கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபமா ஜனதிபதியாக வந்தமையைக் குறிப்பிடலாம். இவ்வாறான நிலையே கீழைத்தேய மக்களைப் பொருத்தும் மேற்கு நாட்டில் நிலவுகின்றது. இது ஒரு நிறைவான அம்சமாகும்.
முன்னைய காலங்களில் குறிப்பிட்ட இனத்தவர் தமது பண்பாடு நிலவும்இடங்களில் மட்டுமே வாழமுடியும். அதையே தமது வாழ்வுப் பிரதேசமாக கட்டுப்படுத்திக் கொள்வர். ஆனால் பல்லினப்பண்பாட்டின் வரவினால் பணமும், வசதியும் உள்ள ஒருவர் உலகில் எங்கு சென்று வாழவும், தமது பண்பாட்டை பேணுவதற்குமான அங்கீகாரத்தை இது வழங்கியுள்ளது.
கடந்த நூற்றாண்டு வரையில் இனங்களுக்கிடையில் சமூக நல்லிணக்கமும், மனிதநேய உணர்வும், மனிதவுரிமைகளை பேணுவதில் சிரமமும் நிலவியே வந்தது. இத்; தொடர்ச்சியான குறைபாட்டினாலேயே முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் ஏற்பட்டன. இனங்களுக்கிடையில் பன்மைத்துவத்தையும் இணங்கிவாழ்தலையும் போதிக்கும் பல்லினப்பண்பாடு மேற்கண்ட சிந்தனைகள் உலக இயங்கியலுக்கு அனுகூலமான வழியில் அமைய உதவுகின்றது.
நாகரீக நிலையை மனித சமுதாயம் அடைவதற்கு முன்பு தாய்வழிச் சமூகமே மேலாதிக்கம் பெற்றிருந்தது எனப்படுகின்றது. பேரரச உருவாக்கங்களோடு வீரியம் பெற்ற ஆணாதிக்கம் பெண் தலைமைத்துவத்தையும், உரிமையையும் பறித்துக்; கொண்டது. பல்லினங்களுக்கிடையில் சம அந்தஸ்தை வலியுறுத்தி, அதனையே நடைமுறைப்படத்தும் பல்லினப்பண்பாடு, பெண்கல்வி வரை வழிசமைத்துள்ளது.
உலகில் வரலாற்றுக் காலத்திலிருந்து நிலவி வரும் பெரும்பான்மை, சிறுபான்மை இனச்சிக்கலை ஓரளவிற்காவது தணிப்பதில் பல்லினப்பண்பாடு வெற்றியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். மிகவும் இறுக்கமான சமூக, சமய. சாதிப் பண்பாடுகளை பேணும் சமூகங்களிடையே உடைவு ஏற்படகின்றமை அதற்கு ஆதாரமாய் அமைகின்றது. ஜனநாயக, சம~;டி அடிப்படையில்; தமது அரசியல், மத உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், பெற்றுக் கொள்வதற்குமான சுதந்திரத்தை இது வழங்கியுள்ளது. உதாரணமாக மிக இறுக்கமான சமூக நடைமுறைகளைப் பேணும் தென்னாசிய நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் குறிப்பிடலாம். பெரும்பான்மை மதமாக இருக்கும் இந்துமதத்தை கொண்டிருக்கும் இந்தியாவிற்கு சிறுபான்மை மதமான சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் அதிகாரம் மிக்க தலைவராக தெரிவு செயய்ப்பட்டமையைக் குறிப்பிடலாம். இவ்வாறு பல நிறைவான அம்சங்களை கொண்டிருக்கின்ற போதிலும் சில குறைவாக பக்கங்களையும் இது கொண்டுள்ளது.
பல்லினப்பண்பாடு அறிவார்ந்த நிலையில் ஏற்க கூடியதாக இருந்தாலும், ஆழ் மனதில் புரையோடிப்போன ஆண்டான் – அடிமை சிந்தனை இதனை அமுல்படுத்துவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் நிலவும் நிலமைகள் பல்லிணப்பண்பாடில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவுக்கான நிரந்தர குடியுரிமையை பெறும் அனைவருக்கும் கிறீன்கார்ட் வழங்கப்படும். அதில் தேச. இன, மத. மொழி வேறுபாடு இருப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான கீறீன் அட்டைகள் தான். ஏனெனில் அதனூடாக பல்லினத்தன்மையை மதிக்கும் நாடு என்பதை உலகத்திற்கு அமெரிக்கா காட்டிக் கொள்கின்றது. ஆனால் அண்மையில் ஆபிரிக்க கறுப்பர் ஒருவரினதும். அமெரிக்க ப+ர்வீக வெள்ளையர் ஒருவரினதும் கிறீன்; அட்டைகளை இலத்திரனியல் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தியபோது இரண்டுக்குமிடையில் பதிவு அடிப்படையில் வேறுபாடு கடைப்பிடிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு அண்மைய பேரனர்தங்களின் போது கூட அமெரிக்க வெள்ளையர்களின்; அபிவிருத்திப் பணிகளுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் மாகாண அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில்; பாராபட்சம் காட்டப்பட்டிருந்தது.
மேலும் பல்லினப்பண்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவந்த பிரான்ஸ் அண்மைக்காலமாக அதிலிருந்து விலகிச் செல்வதை அவதானிக்க கூடியதாகயுள்ளது. கடந்த ஆண்டில் அந்நாடு இஸ்லாமிய பெண்களது மதப்பண்பாடான பர்தா அணிவதை தடை செய்திருந்தது. பர்தா அணிந்து வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியமையடுத்தே இத் தடைச்சட்டம் இமுலுக்கு வந்தது. கடந்த வாரத்திலும் பல்லினப்பண்பாட்டக்கு எதிராக மேலும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. பிரான்சின் நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கு அந்நாட்டின், மொழி, மத,கலாசார அம்சங்களை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் பல்லினப்பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அடுத்து கடந்த வருடத்தில் பிரித்தானியாவில் இடம் பெற்ற மிகப் பெரும் கலவரம் பல்லினத்துவத்தை பேணுவதில் உள்ள சிரமத்தையே வெளிக்காட்டியது. அகதி அந்தஸ்துக்கோரி பிரித்தானியவ இக்கலவரம் வெடித்தது. இப்பாராபட்சம் பாரம்பரியமாக அங்கு இருந்து வருகின்றது. உதாணரமாக பிரித்தானியாவில் குடியேறும் பிறநாட்டு புத்திஜீவிகளுக்கு நகரை அண்டிய பகுதிகளில் வேலை வழங்குவதில்லை. மாறாக விருத்தி குறைந்த பகுதிகளிலேயே வழங்கப்படும். இது அந்நாடு பல்லினப்பண்பாட்டை சரிவர புரிந்து கொள்ளாததை காட்டுகின்றது.
![]() |
கைகள் கொடுத்துக் கொள்ளலாம். |
Saturday, February 18, 2012
இலங்கைத் தமிழர்கள் தமிழ் பேசும் மக்களாக தமிழகத்திலிருந்து புலம்பெயர முன்னரே அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்தனர்:
ஆணைக்கோட்டை சாசனம். |
நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நாடுகளுள்; இலங்கையும் ஒன்றாகும். வரலாற்று எழுத்து மரபு தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்தே அது கட்டமைக்கப்பட்டிருந்தது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து இலக்கிய வழியிலான வரலாற்றைப் பெற்றிருக்கும் இந்நாடானது, அதிகளவில் பெரும்பான்மையினர் வரலாற்றைப் பேணும் நடைமுறையைக் கைக்; கொண்டுள்ளது. அதன்படி சிங்களவர் மட்டுமே இந்நாட்டின் பூர்வீக, நாகரீக நிலையடைந்த குடிகள். அவர்களுக்கு மட்டுமே இத்தீவும், அதன் அரசியலும், வரலாறும் உரித்துடையது எனும் தோரணையில் வரலாறு கட்டமைப்பு பெற்றிருக்கின்றது. ஆனால் ஏனைய இனங்களான தமிழர்கள்;, படையெடுப்பாளர்கள், வணிகர்கள், தற்காலிகமாக வந்து குடியேறியவர்கள், அக்கரையிலிருந்து வந்தோர் என மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதுவும் பிற்பட்ட காலங்களில் நிகழ்ந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அண்மைக் காலத்தில் விருத்தியடைந்து வரும் தொல்லியல் ஆய்வுகள் அதற்கு மாறான ஒரு எண்ணக்கருவை இலங்கை வரலாற்றுப் பார்வையில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இலங்கையில் தமிழர்கள் தமிழ் பேசும் மக்களாக தமிழகத்திலிருந்து புலம்பெயர முன்னரே அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்துள்ளனர் என்பதை கண்டைந்துள்ளது. அதற்குப் பலநிலைப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இலங்கையில் இதுவரை அறியப்பட்ட தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இங்கு வாழந்த காலத்தால் முந்திய மக்கள் இடைக்கற்காலப் பண்பாட்டிற்கு உரியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மக்கள் மலைநாடு தொடக்கம் தாழ்நிலப்பகுதி வரையுள்ள நீர் நிலைகளையும். கடற்கரைப்பகுதிகளையும் அண்டி ஓரளவு செறிவாக வாழ்ந்துள்ளனர் என்பதை இரத்தினபுரி, பலாங்கொடை, கித்துள் கொட, அனுராதபுரம், இரணைமடு, திருகோணமலை, மாங்குளம், முல்லைத்தீவு, மாதோட்டம், பூநகரி ஆகிய இடங்களில் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றது. இலங்கையில் இப்பண்பாட்டின் தோற்றம் 28000 ஆண்டுகள் என காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இரத்தினபுரி, இரணைமடு போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இற்றைக்கு 125000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேலைப்பழங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளமைக்கான சான்றகள் கிடைத்துள்ளன. புல்மோட்டையில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இற்றைக்கு 500000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதப் படிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிரான் தொணியகல குறிப்படுகின்றார். ஆயினும் இன்றைய நிலையில் இலங்கையில் மனிதர் வாழத் தொடங்கியது இற்றைக்கு 28000 வருடங்களுக்கு முற்பட்ட இடைப்பழங்கற்காலத்திலிருந்தே வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகியிருக்கின்றது.
![]() |
பொம்பரிப்பு ஈமத்தாழி |
இப்பண்பாட்டு மக்களைத் தொடர்ந்து பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிட மக்கள் கி.மு.1000 தொடக்கம் வாழ்ந்ததற்கான தடயங்கள் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பொம்பதிப்பு, புத்தளம், அனுராதபுரம், பெரியபுளியங்குளம், திசமகாரகம, கதிரவெளி, கந்தரோடை, வல்லிபுரம், ஆனைக்கோட்டை, பூநகரி ஆகிய இடங்களில் இப்பண்பாட்டின் முக்கிய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் இப்பண்பாட்டுடன் தான் அரசதோற்றம், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்புச் சிவப்பு மட்பாண்டப் பயன்பாடு என்பன தோற்றம் பெற்றுள்ளன. இலங்கையிற்; பரவலாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள இப்பண்பாடு பற்றிய சான்றுகள், இலங்கையில் நாகரீக வரலாறும், சிங்கள மக்களின் மூதாதையினரும் வடஇந்தியத் தொடர்பால் ஏற்பட்டதென்ற பாரம்பரிய பருத்தை முற்றாக நிராகரித்துள்ளன. இப்பண்பாடு தொல்லியல், மானுடவியல், சமூகவியல் ரீதியாகத் தென்னிந்தியாவுடன் குறிப்பாக தமிழ்நாட்டுடன் நெருங்கிய ஒற்றுமைத்தன்மையைக் கொண்டுள்ளது. இவ் இரு வகையான பண்பாடுகளும் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வகையில் காணப்படுவதால், திராவிட பண்பாடுகளுடன்; ஒப்பிட்டு நோக்கக் கூடியளவிலான பண்பாடுகள் இலங்கையில் முனைப்புக் கொள்ளத் தொடங்கி விட்டது.
பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்து முறையை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர். அது அப்பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் உருவான பிராமி எழுத்திற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்ததாகக் காணப்படுகின்றது. அவைகளில் தமிழ் பிராமி மற்றும் தமிழ் சொற்கள் இருந்துள்ளமைக்கு சான்றுகளுண்டு. இவற்றை இக்கால மக்கள் பயன்படுத்திய மட்பாண்டக் குறியீடுகளில் இருந்து அறியலாம். இவ்வகை எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் தமிழகத்திலும், இலங்கையிலுமே அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் ஆரிச்ச நல்லூரிலும், இலங்கையின் அனுராதபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் நவீன காலக்கணிப்பிற்குட்படுத்திய போது அவற்றின் தோற்ற காலம் கி.மு.1500க்கு முற்பட்டதென காலவரையறை செய்யப்பட்டுள்ளது. இக்காலக்கணிப்பு பௌத்த மதத்தோடு தமிழகத்திற்கு பிராமி எழுத்து வருவதற்கு முன்னர் தமிழகத்திலும் இலங்கையிலும் எழுத்தின் பயன்பாடு இருந்தமைக்கு ஆதாரமாக அமைகின்றது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எழுத்து வடிவங்கள் வடபிராமியுடனும், தமிழகப் பிராமியுடனும் பெருமளவு ஒத்ததாக காணப்படுகின்றது. ஆயினும் கூடியளவு தமிழ் மொழியின் செல்வாக்கை காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் வரும் (புழைத்தி முறி) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமை தமிழ் மொழி பற்றிய ஆய்வில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இதே போல் அனுராதபுரத்ததிலும், கந்தரோடையிலும், பூநகரியிலும், மாதோட்டத்திலும் அபிசிதன், ஈழ, ஈழவூர் போன்ற பெயர் பொறிப்புக்கள் மட்பாண்டங்களில் வருகின்றன. எனவே தமிழ் இனக்குழு வருவதற்கு முன்பே இங்கு வாழ்ந்துள்ளனர்.
![]() |
திஸ்ஸமாகாரமவில் காணப்பட்ட மட்பாண்ட பிராமி சாசனம். |
சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் தம்து பெயர்களை முத்திரைகளில் பொறித்தமைக்கு கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து ஆதாரங்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டகளில் தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பல முத்திரைகள் கிடைத்துள்ளன. இலங்கையில்; ஆனைக்கோட்டை, பூநகரி, அனுராதபுரம் போன்ற இடங்களில் இவ்வகையான முத்திரைகள் கிடைத்துள்ளன. அனுராதபுரத்தில் கிடைத்த சுடுமண் முத்திரைகளில் பெருமகன் என்ற தமிழ் பெயர் பிராகிருதத்தில் பருமகன என எழுதப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டையில் கிடைத்த முத்திரையொன்று கோவேர என்ற சிற்றரசன் பற்றி குறிப்பிடுகின்றது. இது தமிழ் மொழி மரபில் கூறப்படுவதால் சிந்துவெளி குறியிடுகளையொத்த முற்பட்ட இப்பராமி எழுத்து வடிவம், தமிழ் மக்களின் வரலாற்றை பெருங்கற்காலத்திற்கு முன்; வரை நீடித்துச் செல்கின்றது. முத்திரை பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில் தமிழ் சிற்றரசன் ஒருவனை முத்திரை குறிப்பிடவதால் இக்காலத்திலேயே தமிழர்கள் இங்கு நிலைபெற்றுவிட்டனர் எனலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை இங்கு பயன்பாட்டிலிருந்த தொடக்க கால இனங்களை, அம்மக்கள் பயன்படுத்திய மொழிகளை ஆராய்வதற்கு தென்னாசியாவில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டுக்கு வந்த பிராமி எழுத்துப்பொறித்த கல்வெட்டுக்கள் முக்கியமானவை. அப்பிராமி எழுத்து முறை இலங்கைக்கு அறிமுகமானவிதம் தொடர்பாக பின்வரும் வரலாறு சொல்லப்படுவதுண்டு.
அசோகன்; ஆட்சியில் பௌத்தமதம் பரவியபோது அம்மதம் பற்றிய செய்திகளை கூறுவதற்கு முதன்முறையாக வட இந்தியாவிலிருந்து பிராமி எழுத்தும் பிராகிருத மொழியும் அறிமுகமாகியதாகக் கூறப்படுகின்றது. அப்பிராமி எழுத்துப் பொறித்த சாசனங்களே கி.மு.3ஆம்; நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தலிருந்துள்ளன. ஆயினும் அந்தம் பிராமி சாசனங்களில்; தமிழுக்குரிய அல்லது தமிழ் நாட்டுக்கு உரிய, அல்லது அவ்வகையையொத்த தனித்துவமான சில பண்புகள் காணப்படுகின்றது என தொல்லியலாளர்களான சந்தமங்கல கருணாரத்ன, ஆரிய சந்தமவச போன்றோர் குறிப்பிடகின்றனர். அவ் அம்சங்களில் முதலாவதாக அமைவது தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் ஆகும். இலங்கையில் காணப்பட்ட பிராமி சாசனங்களில் ள,ழ,ன போன்ற தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பிராமி சாசனங்களில் எச்சாசனங்கள் மிகத்தொன்மையானதென அடையாளம் காணப்பட்டனவோ அச்சாசனங்களில் பெரும்பாலும் தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் காணப்பகின்றன. இதிலிருந்து அசோக பிராமி இங்கு அறிமுகமாவதற்கு முன்னரே தமிழ் எழுத்து வாசனையுடைய மக்கள் குழுமம் ஒன்று வழத் தொடங்கி விட்டதை அறியலாம்.
இலங்கையில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மொழி பயன்பாட்டிலிருந்தது என்பதற்கு பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ் பிராமி சான்றாகும். தமிழ்நாடு தவிர்ந்த இந்திய நிலப்பரப்பில் கர்நாடகம், தெலுங்கு, மராட்டி எனப்பல மொழிகள் பேச்சு வழக்கிலிருந்தும் கி.பி 4ஆம், 5ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. இலங்கை பிராமி கல்வெட்டில் பிராகிருதமாக இருந்த போதிலும்; கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்களும், பிராகிருத மயப்பட்ட தமிழ்ப் பெயர்களும் பரவலாக காணப்படகின்றது. அப்பெயர்கள் பின்வருகின்ற நிலைகளில் தமிழர்கள் இலங்கையில் அக்காலத்திலேயே நிலை பெற்றுவிட்டமைக்கு சான்றாதாரங்களாக விளங்குகின்றன.
தனிநபர் பெயர்கள் தமிழ் மொழியில் அமைந்திருக்கின்றன. உதாரணமாக மல்லன், சுமண், பூதன், கசபன், நாகராசன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பெயரின் பின்னொட்டுச் சொல் 'அன்' என்ற விகுதியுடன் முடிவடைவதனால் இவை தமிழுக்குரிய பெயர்களென்பது உறுதியாகின்றது.
அடுத்து பிராமிக்கல் வெட்டுக்களில் தமிழுக்குரிய உறவுப்பெயர்கள் வருகின்றன. குறிப்பாக மருமகன், மருமகள், மறுமகன், மகள், பருமகள், பருமகன் போன்ற உறவுப் பெயர்களைக் குறிப்பிடலாம். பெரியபுளியங்குளம், அனுராதபுரம் போன்ற இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களில் இப்பெயர்கள் வருகின்றன. மேலும் தமிழ்; அரச உருவாக்கத்தின் தொடக்கத்தில் அதனை அழைக்கப் பயன்பட்ட சொற்களும் பிராமி கல்வெட்டுக்களில் வருகின்றது. ஆய், வேள் போன்றன அவ்வாறானவை. இச் சொற்கள் சங்க இலக்கியங்களில் குறுநில அரசர்களைக் குறிக்க பயன்பட்டதாகும். இது ராஜா என்ற பதத்திற்கு சமமானது என்பர். ரோமிலா தார்பர் அடுத்து தமிழ் இடப்பெயர்களும் கல்வெட்டுக்களில்; வருவதைக் காணலாம். நகர், மலை, ஊர், குளம், ஆவி, புரம், வாஷ போன்றன அவ்வாறானவை. எனவே இவை தமிழ் மக்கள் இங்கிருந்தே உருவாகியுள்ளனர்.
சமூகத்தில் செல்வாக்குடைய நபர்களால் மட்டும் வெளியிடப்படும் நாணயங்கள் கி.மு.3ஆம் நுற்றாண்டுக்கு முன்பே இலங்கையில் தமிழ்; அரச உருவாக்க பின்னணியில் வெளியிடப்பட்டுள்ளமைக்கு சான்றுகளுண்டு. பிராகிருத, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த நாணயங்கள் அக்குறு கொட, அனுராதபுரம், கந்தரோடை, பூநகரி போன்ற இடங்களில் மீட்கப்பட்டள்ளன. இவற்றில் உதிரன், மகாசாத்தன், கபதிகஜபன், கஜசென், திசபுர சடநாகராசன் ஆகிய தமிழ்; பெயர்கள் பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன. இதில் திச புரத்தை ஆண்ட கடதாக அரசனால் வெளியிடப்பட்ட நாணயங்களும் வருகின்றன. எனவே கி.மு.3ஆம். 2ஆம் நூற்றாண்டுகளில் தென்னிலங்கையில் தமிழ் இன குழும சிற்றரசுகள் உருவாகி விட்டன. இதனை மகாவம்சமும் உறுதிப்படுத்துகின்றது. துட்டகாமினி – எல்லாள போரில் 32 தமிழ் சிற்றரசுகளை அவன் தெற்கில் தோற்கடிக்க நேரிட்டதாக கூறுகின்றது.
இலங்கைக்கு தமிழர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும் முன்னமே இங்கு நிலை பெற்று விட்டனர் என்பதை பல்வேறு தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றது. இந்த முடிவானது இலங்கையின் உத்தியோகபூர்வமான வரலாற்று எழுத்தியலில் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக இருக்கின்றபோதிலும் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல், மானிடவியல், இனவரையியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகள் அதனை நோக்கி இழுத்துச்செல்கின்றன.
Monday, February 13, 2012
Subscribe to:
Posts (Atom)